Tuesday, April 10, 2012

S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு - திறப்பு!




S.P.பட்டிணம், ஏப்ரல் 10:இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்ட்து.
இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து நட்த்தி வந்த்து.
இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடாணை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டனர். இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் பின்னர் வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்துச் செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலைத் திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார். இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு 10.04.2012 இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிவாசல் திறக்கப்பட உள்ளது. இன்ஷா அல்லாஹ். காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்துள்ளனர்.
மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று பள்ளிவாசலில் பொது அறிவிப்பு செய்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கடைப்பிடித்துக் காட்டிய முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஆர்ப்பாட்டமோ அமர்க்களமோ இல்லாமல் திறப்பு விழா என்ற பெயரில் அதிக மக்களைக் கூட்டி மற்றவர்களைப் புண்படுத்தக் கூடாது என்பதால் அமைதியான முறையில் இன்ஷா அல்லாஹ் திறக்கப்பட உள்ளது.
அனைவரும் துஆ செய்யுங்கள். இதற்காக ஆர்வத்துடன் வெளியூர் மக்கள் குழும வேண்டாம் எனபதற்காக கடைசி நேரத்தில் இச்செய்தி வெளியிடப்படுகிறது.
நல்ல படியாக பிரச்சனை ஏதுமில்லாமல் பள்ளிவாசல் திறக்கப்பட்டு இறைப்பணி நடக்க வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வட்டாட்சியர் ஆனை: 



 source:onlinepj.com

No comments:

Post a Comment