Tuesday, April 17, 2012

சிதம்பரம் ராகேவேந்திர கல்லூரி அருகே விபத்து 2 பேர் பலி!


கீழமுங்கிலடி, ஏப்ரல் 17:  சென்னை விமானம் நிலையத்தில் உறவினரை வெளிநாட்டு செல்ல  வழியனுப்பிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த நாகை மாவட்டம் பூங்கானுரை சேர்ந்த சர்புன்னிசா (60), ஜபரூத்தின் (40) மற்றும் டிரைவர் கார்த்தி ஆகியோர் காரில் பூங்கானுர் நோக்கி சென்று கொண்டிருந்த போது காலை 7.30 மணியளவில் சிதம்பரம்  கீழமுங்கிலடி ராகேவேந்திர கல்லூரி அருகே எதிர வந்த டிப்பர் லாரியுடன்  நேருக்கு நேர் மோதியத்தில் காரில் இருந்த  சார்புன்னிசா (60) மற்றும் ஜபரூத்தின் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் டிரைவர் கார்த்தி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தில் பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரின் உறவினர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் திரண்டுயுள்ளனர். மேலும் செய்தியரிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை நேரில் சென்று அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி மற்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இன்னா இலைஹி வயின்னா இலைஹி ராஜிஊன்...

No comments:

Post a Comment