Friday, November 30, 2012

பெண்கள் பயான்

சிதம்பரம்;.27.11.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இலங்கை.மிஷால் அவர்கள் ”இறையச்சவாதிகளின் பண்புகள்” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, November 24, 2012

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை


சிதம்பரம்;.23.11.12 அன்று  அப்துர்ரஹ்மான் பிர்தௌசி (மாநில பேச்சாளர்) அவர்கள் 'மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, November 22, 2012

மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள், கசாப் தூக்கு, துப்பாக்கி படம், இஸ்ரேல் தாக்குதல் குறித்து அளித்த பேட்டி வீடியோ

சினிமா கூத்தாடிகளுக்கு TNTJ எச்சரிக்கை!





சென்னை, 22: சென்னையில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் விஸ்வருபம் படத்திலும் முஸ்லிகளுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்குமனால் படத்தை திரையிட விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆணவக்கார ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட வரலாறு!



எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன்.

இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர்,தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான்.அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு   துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர். இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் நபி மூஸா(அலை) அவர்கள்.ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததோடு ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு நபி மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.

ஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி

மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம்.  ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். (அல்குர்ஆன்:  28:3,4)

மூஸா நபியின் பிறப்பு

பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த போது, நபி மூஸா(அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்த காலகட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.

நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவரைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த நபி மூஸா(அலை) அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள். அதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது.இந்த வரலாற்றை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்..

தன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன்  அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான் (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று இக்குழந்தையை பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும் அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர்.மூசாவே பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர். (அல்குர்ஆன் 20:38-40)

நபித்துவம் வழங்கப்படுதல்

மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன்.அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன் என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார். அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார்.(அல்குர்ஆன்:;  28:29-30)

இரு பெரும் அற்புதங்கள் 

உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும்பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார்.மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக!  இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர் (என்று இறைவன் கூறினான்).என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன்.எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன் என்று அவர் கூறினார்.என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பி வை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன் (என்றும் கூறினார்).(அல்குர்ஆன்: 28:31-34)

உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்றுகளுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள் என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்: 28:35)

ஃபிர்அவ்னின் ஆணவம்

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். பெரும் பொய்யரான சூனியக்காரர் என்று அவர்கள் கூறினர் (அல்குர்ஆன்: 40 : 23-24)

ஒடுக்கப்பட்டோருக்காக உரிமைக்குரல்  

ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர் என்று மூஸா கூறினார். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்)கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே  என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக்கொண்டு வா! என்று அவன் கூறினான்.அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்? என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 7: 104-110)

போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள்

இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள் என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர். சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா? என்று அவர்கள் கேட்டனர். (அதற்கவன்) ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள் என்று கூறினான். மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா? என்று கேட்டனர். ''நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள் மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள்.பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். ''உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர். (அல்குர்ஆன்:  7:111-119) 

இஸ்லாத்தை ஏற்ற சூனியக்காரர்கள் 

சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம் என்றும் கூறினர். (அல்குர்ஆன்:  7:120-122)

ஃபிர்அவ்னின் ஆணவப்போக்கு

நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்! என்று ஃபிர்அவ்ன் கூறினான்.உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன் (என்றும் கூறினான்).(அல்குர்ஆன்: 7:123,124)

பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை என்று ஃபிர்அவ்ன் கூறினான். ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன் என்றான். (அல்குர்ஆன்: 28:38)

  நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான். ( அல்குர்ஆன்: 79:24)

சூனியக்காரர்களின் ஈமானிய உறுதி

நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள் என்று அவர்கள் கூறினர்.எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய் (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ,எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக! என்றனர்.(அல்குர்ஆன்; 7:125, 126)

என் இறைவன் அல்லாஹ்வே என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர்உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான் என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது 

நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கைக் கொண்ட ஒருவர் கூறினார். (அல்குர்ஆன்: 40:28)

கடல் பிளந்தது, கொடியவன் கொல்லப்பட்டான்

அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள்புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம். (அல்குர்ஆன்:  28:5,6)

காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்.உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும்,அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். (அல்குர்ஆன்: 26:60-66)

காலம் கடந்த ஞானோதயம்

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம் என்று கூறினான்.இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். (அல்குர்ஆன்: 10:90,91)

அழியாத அத்தாட்சி 

 உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை.உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.   (அல்குர்ஆன்:  10:92,93)

கொடுங்கோலன் பிர்அவ்னை வல்ல அல்லாஹ் அழித்த நாள் தான் ஆஷுரா எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும். திருக்குர்ஆன் கூறும் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் கர்பலா நிகழ்ச்சியில் கரைந்து போய் விட்டது. ஆஷுரா நாள் என்றாலே ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டு விட்டதே!

எல்லாம் வல்ல ரஹ்மானின் அருட்கொடைகளையும், ஆற்றலையும் கடந்து போன அந்த சமுதாயத்தின் தியாக வரலாற்றிலிருந்து உணர்ந்து ஏகத்துவச் சிந்தனையை வலுப்படுத்திக் கொள்ளவேண்டிய நம் சமுதாயம், அதைக் கண்டு கொள்ளாமல் கர்பலாவின் பெயரையும், பஞ்சா போன்ற அனாச்சாரங்களையும் உரத்துச்சொல்லி கைசேதப்பட்டு நிற்கிறது. அல்லாஹ் காப்பானாக!

நன்றி: துபை TNTJ

முஸ்லிம்களை சீண்டும் கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது எப்படி?


நவ, 21: துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்கு தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்பதை நாம் இன்று வரை பார்க்கவில்லை. ஆனாலும் பல சகோதரர்கள் அதைப் பார்த்து அந்தப் படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளராகவோ காட்டியுள்ளது என்று தெரிவித்தனர்.

அப்படியானால் எங்கும் அந்தப் படத்தை திரையிட முடியாத அளவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று 15 .11.2012 அன்று கூடிய அவசர நிர்வாகக் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.

20.11.2012 செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளையும் முற்றுகையிட்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தினந்தோறும் முற்றுகை இடுவது எனவும் தீர்மானித்து காவல்துறையிலும் 15-ம் தேதி அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.

போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தவுடன் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஹனீபா அவர்கள் நமது நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார்.
கூத்தாடி விஜய்யின் தந்தை சந்திரசேகரும், படத்தை இயக்கிய அயோக்கியன் முருகதாசும், படத்தை தயாரித்த அயோக்கியன் தானுவும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் அந்தப் படத்தை நாங்கள் பார்த்து விட்டு ஆட்சேபனை செய்த காட்சிகளை நீக்கி விடுவதாக சொல்லி விட்டனர் என்றும் எழுத்து மூலமாகவும் கையெழுத்திட்டு தந்துள்ளதாகவும் இரண்டு நாட்களில் அவை நீக்கப்படும் என்று அவர்கள் தரப்பில் உறுதி சொல்வதாகவும் தெரிவித்து நீங்கள் போராட்டத்தைக் கைவிடலாமே என்று கேட்டுக் கொண்டார்.
அவர்கள் பணிந்து வந்ததற்கு மதிப்பளித்து தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதே வேண்டுகோளை தேசியலீக் தலைவர் பஷீர் அஹ்மத் அவர்களும் நம் நிர்வாகிகளிடம் வைத்தனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக எந்தப் போராட்டத்தையும் நடத்துவதில்லை. கோரிக்கை நிறைவேறிவிட்டால் அதன்பின்னர் போராட்டம் நடத்துவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைத்தோம்.
அனைத்து முஸ்லிம் தலைவர்களும் அந்தப் படத்தை பார்த்து விட்டு சில காட்சிகளை நீக்கச் சொல்லி விட்டதால் அதன் பிறகு அந்தப் படம் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் இருக்காது என்று நம்பினோம்.
அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் அந்தப் படத்தைப் பார்த்து சில காட்சிகளை நீக்கினால் போதும் என்று சொன்னதால் அவர்கள் கவனமாகத்தான் பார்த்து இப்படி கோரிக்கை வைத்துள்ளனர் என்று நாமும் நினைத்தோம். ஆனால் நீக்கப்பட்ட பிறகும் அந்தப் படத்தின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை.
மூன்று நாட்கள் கழித்து அவர்கள் நீக்கிவிட்டு வெளியிட்ட படம் அதே கருத்தை கொஞ்சமும் குறையாமல் சொல்வதாக பல சகோதரர்கள் கொந்தளித்து போய் தலைமையை தொடர்பு கொண்டார்கள். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக இப்போதும் அந்தப் படம் சித்தரித்துள்ளதாக கூறி அந்தக் காட்சிகளையும் விளக்கினார்கள்.
முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் முன்னால் அழுது கண்ணீர் விட்டு நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று அந்த மூன்று அயோக்கியர்களும் நன்றாக நடித்துள்ளனர். எங்கள் பிள்ளை மேல் சத்தியம் செய்கிறோம் எங்களுக்கு முஸ்லிம்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றெல்லாம் கூறி ஏமாற்றியுள்ளனர். இவர்களும் நன்றாக ஏமாந்து இப்படிப்பட்ட உத்தமர்களா என்று வியந்து போய் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில காட்சிகளை பெயரளவுக்கு நீக்கச் சொல்லி இருக்கிறார்கள். வந்தவர்கள் உண்மைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சினிமாக்காரர்கள் என்பதும், நடித்து யாரையும் ஏமாற்றும் எத்தர்கள் என்பதும் அத்தனை பேருக்கும் எப்படி தெரியாமல் போனது?
நீக்குவது என்றால் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக காட்டும் எந்த ஒரு அம்சமும் இருக்கக் கூடாது என்று வற்புறுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அப்படி செய்யவில்லை என்பது நீக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட படமும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியாகி வசூல் வேட்டை முடிந்து விட்ட நிலையில் போராட்டம் நடத்தினால் அந்த அயோக்கியர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. முஸ்லிம் தலைவர்களை ஏமாற்றி போதுமான அவகாசத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் படத்திலுள்ள ஆட்சேபமான காட்சிகளை நீக்கி விட்டனர் என்று நம்மிடம் கூறி போராட்டம் நடத்த வேண்டாம் எனக்கூறினார்கள். ஆனால் தயாரிப்பாளன், இயக்குனர், நடிகன் ஆகிய மூன்று அயோக்கியன்களுக்கு வலிக்கக் கூடாது; நட்டம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது போல் அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தைப் பாதிக்கும் இந்த விஷயத்தில் கடுமையான உறுதிப்பாட்டை இவர்களால் காட்ட முடியாது என்றால் இது போன்ற பிரச்சனைகளில் தலையைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்ளுமாறு விட்டிருக்க வேண்டும்.
பம்பாய் படம் வந்தபோது இதுபோன்ற கூட்டமைப்புக்கள் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை மழுங்கச்செய்ய யாரும் இருக்கவில்லை. அப்போது மக்களாக கொடுத்த பதிலடிக்குப் பின் மணிரத்னம் இது போன்ற படங்களைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை.
பார்க்க வேண்டிய காசை அந்தக் கும்பல் பார்த்த பின்னர் இப்போது போராட்டம் நடத்துவதால் அந்த அயோக்கியர்கள் நட்டப்படப் போவதில்லை.
நடிகன் விஜய் கிறித்தவனாக உள்ளதால் திருச்சபைகளின் ஆலோசனைப்படி தான் இவன் இப்படி படம் எடுத்திருக்கிறான். இஸ்லாத்தின் எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக கிறித்தவ திருச்சபைகளின் ஆலோசனையுடன்தான் இவன் இது போல் படம் எடுத்திருக்க முடியும். இதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.

(அவனது முழுபெயர் ஜோசப் விஜய். பார்க்க: அவன் சிறுவயதில் அவனது தந்தையுடன் ஞானஸ்நானம் எடுக்கும் புகைப்படம்)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி படம் எடுத்த கிறித்தவனுக்கும் நடிகன் விஜய்க்கும் ஒரே சக்திதான் பின்னணியில் இருக்கிறது.
முஸ்லிம்கள்தான் பயங்கரவாதிகள் என்ற கருத்து நிலைநாட்டப்பட்டால் யாரும் இஸ்லாத்தின் பக்கம் தலைவைக்க மாட்டார்கள் என்ற திட்டம் இதன் பின்னால் இருக்கிறது. இதே திட்டம்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி படம் எடுத்த அயோக்கியனுக்கும் இருந்தது.
இதை இனியும் நாம் சகித்துக் கொள்ள முடியாது. அண்ணன் தம்பிகளாக வாழும் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்தான் என்று சித்தரிப்பதைப் பொறுத்துக் கொண்டால் நாம் முற்றிலுமாக அந்நியப்பட்டுப் போவோம். அமைதிப்பூங்காவான தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறிப்போகும். இதை உணர்ந்து கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். இது கூத்தாடிகளின் கற்பனை என்று எடுத்துக் கொள்ள முடியாது.

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்க்கைப் பிரச்சனை. முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் சின்ன பிரச்சனை வந்தால் அனைவரும் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் அளவுக்கு இந்தப் படம் மற்றவர்களுக்கு வெறியேற்றியுள்ளது.
அமெரிக்க அயோக்கிய அரசாங்கம் ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது அநியாயப் போர் தொடுத்ததை இந்த விஜய் என்ற நாய் படம் எடுப்பானா? அல்லது பாதிரியார்களின் லீலைகளை படம் எடுப்பானா? உலகமகா தீவிரவாதிகள் கூட்டத்தைச சேர்ந்தவன் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க துணிவு பெற்றுள்ளான்.
இனிமேல் செய்ய வேண்டியது என்ன?:
விஜய், முருகதாஸ், தானு ஆகிய மூன்று அயோக்கியர்களும் தமிழகத்தில் எங்கெல்லாம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்களோ அந்தத் தகவல் கிடைத்தவுடன் இவர்களுக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் எதிரிகள் என்று தொடர்ந்து அடையாளம் காட்ட வேண்டும். இது குறித்து தலைமை மூலம் முறைப்படி அறிவிப்புச் செய்யப்படும்.
கமலஹாசன் என்ற அயோக்கியனும் இதையே வழக்கமாகக் கொண்டுள்ளான். இவன் எடுக்கும் விஸ்வரூபம் படத்தின் பெயரையே அரபு எழுத்து போல் எழுதி விளம்பரம் செய்கிறான் என்றால் பரமக்குடி பார்ப்பான் கமலஹாசனுக்கு எவ்வளவு துவேசம் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
விஸ்வரூபம் படம் இதுபோல் எடுக்கப்பட்டால் அடுத்த நிமிடமே, “பாபா” படத்துக்கு ராமதாஸ் கொடுத்தது போன்ற பதிலடியைப் போல் எந்த ஊரிலும் அந்தப் படத்தை திரையிட முடியாத நிலையை ஏற்படுத்தியதுபோல் சமுதாயம் பதிலடி கொடுத்தால் அதை எந்த முஸ்லிம் இயக்கமும் தடுக்கக் கூடாது.
பணம் சம்பாதிப்பதற்காக கட்டிய மனைவியைக் கூட கூட்டிக் கொடுக்கும் கூத்தாடிக் கும்பலின் இந்தப் போக்கை இனியும் சகித்துக் கொள்ள முடியாது.
பிற சமுதாய மக்களிடமிருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தி வெறுப்பை விதைக்கும் அக்கிரமத்தை எந்த விலை கொடுத்தாகிலும் தடுக்க வேண்டும். அதனால் எந்த விளைவு ஏற்பட்டாலும் பொருட்படுத்தத் தேவை இல்லை என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் அறிவிக்க வேண்டும். காயம்பட்ட முஸ்லிம்கள் அவர்களே பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களை விட்டுவிட வேண்டும்.
அப்போதுதான் இதையே வேலையாகக் கொண்டு திரியும் அயோக்கிய சினிமாக் கூட்டம் அடங்கும். இவர்களை அடக்கியே ஆக வேண்டும்.
காயம்பட்ட முஸ்லிம்கள் அதற்கேற்ப எப்படி நடந்து கொண்டாலும் நாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் முன்னரே அறிவித்து விட வேண்டும். மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வார்கள்.
கேனத்தனமான பேச்சுவார்த்தைக்குப் போகாமல் எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
எவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை சமுதாயம் எடுத்தாலும் அதை யாரும் தடுக்கக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் இது போன்ற கருத்துக்கள் விதைக்கப்பட்டால் அதன் விளைவாக முஸ்லிம்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படும். அக்கம்பக்கத்தில் வசிக்கும் முஸ்லிமல்லாத மக்கள் சந்தேகத்துடன் முஸ்லிம்களைப் பார்ப்பார்கள்.

இன்னும் வேண்டாத பல விளைவுகள் ஏற்படும் என்பதால் தான் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் இந்த அயோக்கிய சினிமாக் கூட்டத்துக்கு மக்கள் தங்கள் விருப்பப்படி தக்க பதிலடி கொடுத்தால் முஸ்லிம் தலைவர்கள் அதில் தலையிட்டு தடுக்க வேண்டாம் என்று கோருகிறோம்.


Source: 
www.tntj.net

Monday, November 19, 2012

வாராந்திர பயான்-சிதம்பரம்

சிதம்பரம்;.18.11.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இமாம் மவ்லவி சாபி அவர்கள் 'மரண சிந்தனை' என்ற தலைப்பில்  உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, November 17, 2012

நான் முஸ்லிம் தாவா

சிதம்பரம்; 16.11.12 அன்று  ராமன் என்ற சகோதரர்க்கு கிளை தலைவர் ஆதம்  அவர்கள் 'குரான் இறை வேதமே, மற்றும் இறைவனின் வல்லமை ' என்ற தலைப்பில் அழைப்பு பனி செய்தார்கள். .
அவர்களுக்கு அல்லாஹ்  நேர் வழி காட்டுவானாக

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை

சிதம்பரம்;.16.11.12 அன்று  இமாம் முஹம்மது தம்பி அவர்கள் 'மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் –சிதம்பரம் கிளை


சிதம்பரம்; 16.11.12 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  டெங்கு விழிப்புணர்வு பிரச்சார நோட்டிஸ் சிதம்பரத்தில் முக்கிய வீதிகளில் கிளை நிர்வாகிகள் விநியோகம் செய்தார்கள்.

Wednesday, November 14, 2012

குர்ஆன் ஹதீஸ் பேனர்கள் – சிதம்பரம்


சிதம்பரம்;.11 11 2012 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குரான் ஹதீஸ் அடங்கிய விழிப்புணர்வு பேனர்கள் சிதம்பரம் பகுதிகளில் பல்வேறு வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதார்கள் நின்று படித்து விட்டு செல்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்

வாராந்திர பயான்-சிதம்பரம்

சிதம்பரம்;.11.11.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் முஹம்மது தம்பி அவர்கள் 'மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, November 7, 2012

கூட்டு குர்பானி-சிதம்பரம்



சிதம்பரம்; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம்  கிளை சார்பாக 28.10.12 அன்று 18மாடுகள் கூட்டு குர்பானிக்காக வழங்கப்பட்டது. சிதம்பரம் ,பூதகேணி பள்ளிபடை ,பின்னத்தூர் ,கிள்ளை ஆகியஊர்களுக்குகறிவழங்கப்பட்டது.36ஆட்டுத்தோலும், 18 மாட்டுத் தோலும் வசூல் செய்யப்பட்டது.

Tuesday, November 6, 2012

பெண்கள் பயான்

சிதம்பரம்;.01.11.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இமாம் மவ்லவி ஸாபி அவர்கள் 'இறையச்சம்' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.