Thursday, September 27, 2012

நான் முஸ்லிம் தஃவா

கடைகளில் நான் முஸ்லிம் தஃவா
சிதம்பரம்; 24.09.12  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாற்று மத சகோதரர்க்கு கடைகளில் தஃவா செய்யபட்டது அவர்கள் இஸ்லாம் குறித்து பலவிதமான கேள்விகளுக்கு,மவ்லவி ஹனீப் அவர்கள் விளக்கி தெளிவு படு தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ். 

திரு குரான் அன்பளிப்பு


சிதம்பரம்; 25.09.12  அன்று  சுரேஸ் என்ற சகோதரர்க்கு மவ்லவி ஹனீப் அவர்கள் இஸ்லாம் குறித்து பலவிதமான கேள்விகளுக்கு, விளக்கி  தஃவா செய்தார்கள் கிளை செயலாளர் இப்ராஹிம், மற்றும் நிர்வாகி அன்வர்  சகோ PJ தமிழாக்கம் திருகுரான் வழங்கினார்கள் .அல்ஹம்துலில்லாஹ். 

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்



சிதம்பரம்; 24.09.12 திங்கள்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'அல்லாஹ்வின் வல்லமை ;என்ற தலைப்பில் இமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில்பெண்களும்,மற்றும்ஆண்களும்கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, September 25, 2012

தனிநபர் தஃவா


கடைகளில் தஃவா

சிதம்பரம்;24.09.12  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடைகளில் தனி நபர் தஃவா செய்யபட்டது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'தனி மனிதன் ஒழுக்கம் 'பற்றி விளக்கி தஃவா செய்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ். 

திரு குரான் அன்பளிப்பு

சிதம்பரம்;  24.09.12 அன்று நகர காவல் துறை ஆய்வாளர் முருகானந்தம் அவர்களுக்கு மாவட்டபொருளாளர்AK தாஜ்தீன்,மற்றும் கிளை செயலாளர் இப்ராஹிம்,மவ்லவி ஹனீப் அவர்கள் சகோ PJ தமிழாக்கம் திருகுரான் மற்றும்,மாமனிதர் நபிகள் நாயகம் ,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் வழங்கினார்கள்..அதை மகவும் மகிழ்ச்சிவுடன் பெற்று கொண்டார்.அவர் நம்மிடம் காட்டிய மரியாதை மத நல்ல்னதுக்கு ஓர் எடுத்து காட்டாக விளங்கினார்.எனபது குறிப்பிடதக்கது. .அல்ஹம்துலில்லாஹ்  
 

Monday, September 24, 2012

நான் முஸ்லிம் தாவா


சிதம்பரம்; 23.09.12 அன்று கிளை நிர்வாகி அன்வர்  முன்னிலையில் சுரேஸ்,சீனு,முருகன் ஆகிய சகோதரர்க்கு நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் 'குரான் இறை வேதமே, மற்றும் இறைவனின் வல்லமை ' என்ற தலைப்பில் அழைப்பு பனி செய்தார்கள். .
அவர்களுக்கு அல்லாஹ்  நேர் வழி காட்டுவானாக.

வாராந்திர பயான்-- சிதம்பரம்


சிதம்பரம்;.23.09.12 சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'குழந்தை வளர்ப்பு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

.பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தஃவா


சிதம்பரம்;22.09.12  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடைகளில் தனி நபர் தஃவா செய்யபட்டது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'சொர்க்கம் நரகம்'பற்றி விளக்கி தஃவா செய்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ். 

Sunday, September 23, 2012

பள்ளி மாணவிகளுக்கு-புக் வழங்குதல்



சிதம்பரம்; 21.09.12  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு துவாக்களின் தொகுப்பு புத்தகம் 70-பேருக்கு வழங்கபட்டது இதில் மாவட்டபொருளாளர்AK தாஜ்தீன்,மற்றும் கிளை செயலாளர் இப்ராஹிம்,மவ்லவி ஹனீப் அவர்கள் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ். 

தனிநபர் தஃவா

கடைக்குள் தஃவா
சிதம்பரம்;22.09.12  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தனி நபர் தஃவா செய்யபட்டது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'தொழுகையின்அவசியம்பற்றி'விளக்கி தஃவா செய்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ். 

தனிநபர் தஃவா


சிதம்பரம்; 21.09.12 அன்று நவாப் ஜான் என்ற சாகோதரர்க்கு அல்லாஹ்வின் வல்லமை பற்றி சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் தஃவா செய்து தெளிவு படுத்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Friday, September 21, 2012

நான் முஸ்லிம் தஃவா

சிதம்பரம்;  20.09.12 அன்று சுரேஸ் என்ற சகோதரர்க்கு  இஸ்லாத்தை,  பற்றி இஸ்லாம் குறித்து பலவிதமான கேள்விகளுக்கு, tntj நிர்வாகி அன்வர் முன்னிலையில்  நமது பள்ளி இமாம் மௌலவி ஹனீப்  அவர்கள்  விளக்கி  தஃவா செய்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.  
                     அவருக்கு நேரான வழிக்கு இறைவனிடம் பிரார்த்திப்போம் 
           
                    

கேள்வி பதில் நிகழ்ச்சி –சிதம்பரம்

சிதம்பரம்;   20.09.2012 வியாழகிழமை  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி   நடைபெற்றது.  சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்  கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இதில் ஏராளமான சகோதர ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். .அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரத்தில் நடைப்பெற்ற TNTJ நிர்வாக தர்பியா!


சிதம்பரம், செப் 20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்கடலூர் மாவட்டக் சார்பாக சிதம்பரத்தில் 20.09.2012 வியாழகிழமை  நமது  மர்கஸ்ஸில்   தர்பியா (நல்லொழுக்க பயிற்சி முகாம்) நடைபெற்றது. அதில் மாவட்ட தலைவர் சகோ.முத்துராஜா தலைமையில் நடைபெற்றது.
 

இந்த தர்பியா முகாமில் சிதம்பரம் தவ்ஹீத் பள்ளி இமாம் சகோ.முஹம்மது ஹனீப் அவர்கள் நபி (ஸல் ) அவர்களின் வாழ்கை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைளை பற்றி தெளிவாக விளக்கினார்கள்.



இதில் பரங்கிபேட்டை, பின்னத்தூர், கிள்ளை மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களின் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது தவிர இதே நாளில் நெல்லிக்குப்பம்,பெண்ணாடம், மங்கலம்பேட்டை  ஆகிய ஊர்களிலும்  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

Thursday, September 20, 2012

கடைக்குள் தஃவா

சிதம்பரம்; 19.09.12 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடைக்குள்  தஃவா செய்யப்பட்டது மாவட்ட பொருளாளர் தாஜ்தீன் முன்னிலையில் நமது மர்கஸ் இமாம் மௌலவி ஹனீப் அவர்கள் அல்லாஹ்விற்கு கட்டுபடுதல் பற்றி விளக்கி  தஃவா செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
 

மக்தப் துவங்கப்பட்டது

விடுமுறைக்கு பிறகு மதரஸா மீண்டும்  துவங்கப்பட்டது

சிதம்பரம்; அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் விடுமுறைக்கு பிறகு மதரஸா மீண்டும்  துவங்கப்பட்டது.நமது மர்கஸ்ஸில் காலை 6.00 மணி முதல் மற்றும் கொள்ளுமேட்டு தெருவில் மாலை 5.00 மணி முதல் நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்களால் வழக்கம் போல் செயல்படும்.

தனி நபர் தஃவா


சிதம்பரம்;18.09.12  அன்று  சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தனி நபர் தஃவா செய்யபட்டது சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாயபணிகளை 'விளக்கி தஃவா செய்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.

சிதம்பரம் கிளை சார்பாக பின்னத்தூரில் பெண்கள் பயான்

சிதம்பரம்;17.09.12 திங்கள்கிழமையன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுபடுவோம் ;என்ற தலைப்பில் இமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில்பெண்களும்,மற்றும்ஆண்களும்கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – சிதம்பரம் கிளை

 தாயத்து அறுத்து எறியப்பட்டது
சிதம்பரம்; கிளையின் சார்பாக 17-9-2012 அன்று நமது மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள்  ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு  தாயத்து  கயிறு கழற்றி எரியப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ். 

சிதம்பரம் வாராந்திர பயான்

சிதம்பரம்;.16.09.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.சிதம்பரம் தவ்ஹீத் மர்கஸ் இமாம் மவ்லவி ஹனீப் அவர்கள் 'பெற்றோரை பேனுவீர்'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, September 18, 2012

சுமையா (ரலி) அன்ஹாவின் வாரிசுடா--வீரத்தை பாருங்கள்

வீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்!

சென்னை, செப் 17: சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 15.09.2012அன்று  அமெரிக்க தூதரகம் முற்றுகை நடந்த போது ஒரு சகோதரி நாங்கள் சுமையா (ரலி) அன்ஹாவின் வாரிசுடா என்று உலகுக்கே நிரூபித்த வீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்!


Sunday, September 16, 2012


சிதம்பரத்தில் TNTJ நடத்திய போராட்டத்தின் பத்த்ரிக்கையாளர் சந்திப்பு! (வீடியோ)

சிதம்பரம், செப் 15: சிதம்பரத்தில் TNTJ நடத்திய போராட்டத்தின் பத்த்ரிக்கையாளர் சந்திப்பு!













சிதம்பரத்தில் TNTJ நடத்திய எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம்!


சிதம்பரம், செப் 15: நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சிதம்பரத்தில் இன்று (15.09.2012) மாலை 4:30 மணியளவில் கஞ்சி தொட்டி அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இதில் சிதம்பரம் தவ்ஹீத் பள்ளி இமாம் சகோ.முஹம்மது ஹனீப் அவர்கள் கண்டன உரையை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்  உட்பட ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும்,  திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள Youtube-ஐ  கண்டித்தும் கொழுத்தும் வெயிலில் கோசங்களை எழுப்பினர்.


இதில் முஸ்லிம்களின் உயிர்யினும் மேலாக நினைக்கும் நபிகள் நாயகத்தை கொஞ்சைப்படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து ஆக்கோரஷமான கோஷங்களை எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, திரைப்படம் எடுத்த கயவனின் உருவ பேணர்களை நமது சகோதரர்கள் கொளுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
எழுச்சி மிகு இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!