Saturday, March 31, 2012

நான் முஸ்லிம் தாவா



சிதம்பரம்;   29.03.12 வியாழன்று அன்று பேக் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்த மாற்று மத சகோதர, சகோதரிகளான,ராஜா ,பாண்டியன் ,ராஜாராம் ,மூர்த்தி ,சாந்தினி,ஆகியோருக்கு நகர செயலாளர் இப்ராகிம் ,துணை செயலாளர் A.தாஜ்தீன் முன்னிலையில் நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் 'இறை கொள்கை ஒன்றே'  என்ற தலைப்பில் அழைப்பு பனி செய்யப்பட்டது அனைவரும் மிகவும் ஆர்வமாக உன்னிப்பாக கேட்டார்கள்.

கொள்ளு மேட்டுத் தெருவில் பெண்கள் பயான்

சிதம்பரம்; 29.03.12 அன்று மதியம் கொள்ளு மேட்டுத் தெருவில் உள்ள வீட்டில்
 'குர் ஆன் இறை வாக்கு' என்ற தலைப்பில் நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பெண்கள் பயன் அடைந்தார்கள்.

Friday, March 30, 2012

மதரஸா-ஐனுள் ஹுதாவில் பரிசளிப்பு விழா





சிதம்பரம்; 28.03.12 புதன் கிழமை அன்று கொள்ளு மேட்டுத் தெருவில் உள்ள மதரஸா-ஐனுள் ஹுதாவில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் முன்னிலையில்,மாவட்ட பொருளாளர் AK.தாஜ்தீன் ,நகர நிர்வாகிகள் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்கள்  அல்ஹம்துலில்லாஹ் 

Thursday, March 29, 2012

புகை பிடித்தவருக்கு தாவா

சிதம்பரம்; சிகரட் என்ற தீய பழக்கத்தினால் ஏற்படும் தீமை பற்றி நமது பள்ளி இமாம் ஹனீப் மற்றும் கிளை செயலாளர் இப்ராஹீம் ஆகியோர் அவர்களுக்கு  தாவா செய்யப்பட்டது. உடன் இத தீய பழக்கத்தை இப்போதே விட்டு விடுகிறேன் என்று உறுதியுடன் சென்றார்கள். அல்ஹம்துலில்லாஹ் 

நான் முஸ்லிம் தாவா


சிதம்பரம்; மாற்று மத சகோதரர்கள் பொது இடத்தில் நின்று கொண்டு சிறு நீர் கழித்தவர்களை; அழைத்து நமது பள்ளி இமாம் ஹனீப்,கிளை செயலாளர் இப்ராஹிம் ,ஆகியோர் அவர்கள் இஸ்லாத்தில் சிறு நீர்கழிப்பதற்கு காட்டி தரக்கூடிய செயலை  அன்பான முறையில் சொன்னவுடன் ,இனி மேல் நானும் இது போல் கடை பிடிக்கிறேன் அன்று உறுதி அளித்து விட்டு சென்றார்கள்.

இஸ்லாத்தை ஏற்றவருக்கு தாவா

சிதம்பரம்; இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆமினா அவர்களுக்கு தொழுகையின் முக்கியத்துவம் பற்றி நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் கிளை செயலாளர் இப்ராஹிம் முன்னிலையில் அழைப்பு பனி செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

Wednesday, March 28, 2012

நான் முஸ்லிம் தாவா


சிதம்பரம்; 26.03.12 திங்கள் கிழமை அன்று நகர செயலாளர் A.இப்ராஹீம் ,பொருளாளர் MM.ஹனீப் முன்னிலையில்,கம்பெனி பிரதிநிதி நரசிம்மன் அவர்களுக்கு நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் 'குரான் இறை வேதமே ' என்ற தலைப்பில் அழைப்பு பனி செய்யபட்டு,திரு குரான் ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது . அவர்களுக்கு அல்லாஹ்  நேர் வழி காட்டுவானாக. 

நான் முஸ்லிம் தாவா

சிதம்பரம்; 26.03.12 திங்கள் கிழமை அன்று மதியம் நகர செயலாளர் A.இப்ராஹீம் ,துணை செயலாளர் S.தாஜ்தீன் முன்னிலையில்,இமாம் ஹனீப் அவர்கள் 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் வெற்றி வேல் ,புகழ் ,வள்ளி,பச்சையம்மாள்,ராஜ்,ஆகியோருக்கு அழைப்பு பனி செய்யப்பட்டது . அவர்களுக்கு அல்லாஹ்  நேர் வழி காட்டுவானாக. 

Tuesday, March 27, 2012

உலக கல்வியும், மார்க்க கல்வியும் உங்கள் குழந்தைக்கு!

பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படும் இஸ்லாம், ஷிர்க் பித் அத்தை போதிக்கும் சுன்னத் ஜமாத்(?) கொள்கையைச் சார்ந்ததாகும்

பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.
சாதாரண மக்கள் இங்கு படிப்பது நடக்காத காரியம். சரி குறைந்த செலவில் மார்க்கம் மற்றும் உலக கல்வி போதிக்கும் இஸ்லாமிய பள்ளி இருக்கின்றதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இனிமேலும் உருவாவதற்க்கு வாய்புகளும் குறைவுதான்.
தற்போது உயர்ந்துவரும் நிலத்தின் மதிப்பு, வாடகை, ஆசிரியர் சம்பளம், கரண்ட் பில், வாகன வசதி என பல பிரச்சனைகள் இருப்பதால் இனிமேலும் யாராவது அப்படி ஒருபள்ளிக் கூடம் ஆரம்பித்தாலும் இதை சேவை அடிப்படையில் செய்ய யாரேனும் முன்வந்தாலே தவிரகுறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்த இயலாது. ஏழைகள் என்ன செய்வது? வசதி குறைந்தவர்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என இப்போது பார்ப்போம்.
உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் (கட்டணம் மிக மிக குறைவு சில நூரு ரூபாய்கள் தான்).பாடம் எளிதாக இருக்கும்,பள்ளியில் கல்வி கற்கும் நேரமும் குறைவு. எனவே குழைந்தைக்கு அதிக சுமை இருக்காது, படிப்பை தவிர பிற நல்ல விஷயங்களில் (மார்க்க கல்வியை கற்க) கவனம் செலுத்த நேரம் இருக்கும். மீதமுள்ள நேரத்தில் மார்க்க கல்வியை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள்.
பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வி போதிக்க பெற்றோர்கள் ஆலிமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அனைத்தும் தமிழில் வந்துவிட்டன, விளகத்திற்க்கு இஸ்லாமிய ஆடியோ வீடியோ உரைகளும் இலவசமாக அல்லது ரூ.20, ரூ.30-யில் கிடைக்கின்றன (இஸ்லாமிய ஆடியோ, வீடியோ உரைகள் இலவசமாக Download செய்ய பல தமிழ் இணையதளம் இருக்கிறது) வெரும் அரபியில் குர் ஆன் ஓத கற்றுகொடுப்பது மட்டும் அல்லாமல், குர் ஆனை தாய் மொழியில் (தமிழிலோ, உருதுவிலோ) சொல்லிகொடுங்கள், பெரும்பாலான ஹதீஸ் கிதாபுகள் (புஹாரி, முஸ்லீம்), தமிழில் கிடைக்கின்றன. அதையும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
ஆண்கள் வெளி நாடுகளில் இருந்தால் வீட்டில் உள்ள பெண்களை பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிக்க சொல்லுங்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்களும் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். உலக கல்வியையும் ஒழுங்காக பிள்ளைகள் படிக்கின்றனரா என கண்காணிக்கலாம்.
உண்மையிலேயே அந்த குறிபிட்ட பள்ளிகள் இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றனவா?
சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படும் இஸ்லாம், ஷிர்க் பித் அத்தை போதிக்கும் சுன்னத் ஜமாத்(?) கொள்கையைச் சார்ந்ததாகும்.
எனவே அவர்கள் போதிக்கும் இஸ்லாமிய கல்வி முழுக்க குர் ஆன் ஹதீஸ் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நபி வழி பின்பற்ற இந்த பள்ளி சரிவருமா?
இஸ்லாமிய கல்வி கற்க பள்ளிகளை சார்ந்திருப்பதால் ஏற்படும் தீய்மைகளும், நாமே போதிப்பதால் ஏற்படும் நன்மைகளும்
1. பண விரயம் : உலக கல்வியுடன் சேர்ந்த்து இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான கல்வி நிருவனங்கள் அதிக அளவில் பணம் வசூலிக்கின்றன. ஆனால் உண்மையான இஸ்லாத்தை போதிப்பதில்லை. பெற்றோர்களை ஏமாற்ற மாணவர்களுக்கு சில துஆக்களை சொல்லிக்கொடுத்து, பெற்றோர்களிடன் சொல்லிகாட்டி இஸ்லாமிய கல்விபோதிப்பதாக சொல்கின்றன. நாமே நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பெரும் அளவில் பணம் மிச்சமாகும்.
2. பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடக்க : இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடப்பதில்லை என குற்றச்சாட்டு பெற்றோர்கள் சொல்கின்றனர். நாமே இஸ்லாமிய கல்வியை நம் பிள்ளைகளுக்கு போதித்தால், நம்பிள்ளைகள் நம் மூலம் இஸ்லாத்தை அறிந்துகொள்வதினால் நம்மீது அன்பும், பாசமும் வைத்து நம்மை மதித்து நடப்பார்கள். பெறோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்பு அதிகரிக்கும். பிற்காலத்தில் நம்பிள்ளைகள் நல்ல நிலைக்குவந்தால், இதற்க்கு நம் பெற்றோர்கள்தான் காரணம் என எண்ணி வயதான காலத்தில் நம்மை சிறந்த முறையில் பராமரிப்பார்கள் (இன்ஷா அல்லாஹ்). இல்லையேல் நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள் என சொல்லி ஆசிரியரை மதிக்கும் அளவிற்க்கு கூட பிள்ளைகள் பெற்றோரை மதிக்காத நிலை ஏறபட்டு விடலாம்.
குடும்பமே தீய விஷயங்களில் இருந்து விலகி இருக்கலாம் : நாமே பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிப்பதால் டிவி-போன்ற தீமையான விஷயத்தில் இருந்து நாமும் நம் பிள்ளைகளும் விலகி இருக்கலாம் (இன்ஷா அல்லாஹ்). நல்ல விஷயத்தில் நேரத்தை செலவளிப்பதால் வீட்டில் சண்டைபோட நமக்கு நேரம் இருக்காது, எனவே குடும்பத்தில் அமைதி நிலவும் இன்ஷா அல்லாஹ்.
பெற்றோர்களுடைய இஸ்லாமிய அறிவும் வளரும் : பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை போதிக்க நாம் இஸ்லாத்தை அறிந்துகொள்வது அவசியமாகும், இதனால் நமக்கும் குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் உள்ள தொடர்பு அதிகமாகும். நாமும் ஒழுக்கத்துடனும், பண்புடனும் நடந்துகொள்வோம், இஸ்லாமிய தெளிவு இருப்பதினால் கணவன் மனைவி பிரச்சனை ஓரளவிற்க்கு குறையும். இறப்பிற்க்கு பிறகு நம்முடைய வாழ்வும் சுவனத்தில் அமைய வாய்ப்பாகும் இன்ஷா அல்லாஹ்.
வீட்டில் இஸ்லாமிய கல்வி போதிக்க தடுக்கும் காரணிகள்.
1. மார்கத்தை சொல்ல ஆலீமாக இருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர், அப்படி கிடையாது, அந்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. உங்களுக்கு அரபி தெரியாவிட்டாலும், தற்போது தமிழிலேயே குர் ஆன் ஹதீஸ்கள் கிடைக்கின்றன. விளக்கத்திற்க்கு இஸ்லாமிய புத்தகங்களும், இஸ்லாமிய உரைகளும் கிடைக்கின்றன. இவைகளை முறையாக படித்து, பார்த்து வந்தாலே நீங்களும் ஆலீம் ஆகிவிடலாம்.
2. அடுத்து டிவி. தற்போது பெரும்பாலும் பெண்கள் டிவியிலேயே மூழ்கிவிடுகின்றனர். நேரம் அனைத்தையும் அதிலேயே செலவிடுகின்றனர், இதனால் பிள்ளைகளை கவனிக்க நேரம் இல்லாமல் போய்விடுகின்றது. வீட்டில் பிரச்சனைகள் தான் அதிகரிகின்றது. டிவிபார்க்கும் நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பிள்ளைகளும் நன்றாக வளர்வார்கள், உங்களுடைய கணவனின் பணமும் மிச்சமாகும், அந்த பணத்தில் நீங்கள் விரும்பிய நகைகளை வாங்கி அணிந்துகொள்ளலாம்.
குறிப்பு : இஸ்லாத்தில் உலக கல்வி, மார்க்க கல்வி என பிரிவினை கிடையாது. மக்கள் விளங்கிக் கொள்வதற்காக அவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது.
ஆக்கம் :S.சித்தீக்.M.Tech., TNTJ மாணவர் அணி

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் பிரிட்டன் மக்கள்:அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்!




பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.(பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)
கிறித்துவ உலகத்தின் அடித்தலமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
2001 – ல் எடுக்கப்பட்ட கணக்கெடுபில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கண்க்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).
பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்ற்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர்  கூறுகையில் நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என தெரிவித்தார் .
ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரசாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உன்னத பாட்டு போன்ற ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எரிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றனர்.
இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறித்தவ உலகம் பொய் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றது. பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுகொன்ற CIA இவர்கள் தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என பத்திரிக்கையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாத்தோடு சம்மந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
கிறித்துவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உலரல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறித்துவகளை தக்கவைக்க முடியாது என்பதை கிறித்தவ மிஷினரிகள் நன்றாக உணர்ந்துள்ளன, பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறித்துவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழவைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலருக்காளுக்காக விவாத வேஷம் போடும் சான் (SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறைவேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உலறி கொட்டியது.
ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்பிரசாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.
பொது மேடையில் வாசிக்கும் தகுதி கூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துதான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.
அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்க்கு தலைவியாக உள்ளார். இவர்களை போன்ற பலர் கிறித்துவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர்வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவருகின்றனர்
பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில் …
பவுல் மார்ட்டின் : எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனை படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.
(குர்ஆன் குறித்த விவாததிற்க்கு வரமால் ஓடி ஒளியுன் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது, லண்டனை சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறித்துவர்கள் குர் னின் அறிவியல் அற்புதங்களை பார்த்து ஆயிரகணக்கில் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள் என பயந்து போய் தந்திரங்கள் செய்து தப்பிக்க நினைகின்றது சான்(SAN)).
டென்னிஸ் ஹார்ஸலி : நான் ஒரு கிறித்துவர், கத்தோலிக்க பள்ளியில் படிதேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனை படிக்கும் போது ஏசு, மேரி, தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறித்துவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்க்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால், தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)
கதீஜா ரியோபுக் : நான் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வார வாரம் சர்ச்சிற்க்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை, ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனது தாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ளமுடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்
ஹனா தஜீமா : நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவாதக இருந்தது எனவே ஆழ்ந்த மத பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்
இது கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்க்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்து சொன்னால் இஸ்லாத்தை ஏற்க்க கோடிகணக்கான கிறித்துவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயாராக இருகின்றனர் இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறித்துவ மக்களுக்கு எடுத்து சொல்வதுதான் மீதமிருக்கும் வேலை
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல் குர்ஆன் 5: 83)
கிறித்துவ மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துவைக்கும் இந்த புனித பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து செய்து கொண்டு இருகின்றது அல்லாஹ்வின் உதவியுடன் கிறித்துவ பாதிரிமர்களுடன் பல விவாதங்களை செய்து உண்மையை நிலை நாட்டியுள்ளது,
சான் (SAN) மட்டும் குர்ஆன் குறித்த விவாத்திற்க்கு வந்தால் குர்ஆனின் அற்புதங்களை கிறித்தவர்களுக்கு விளக்கி, பைபிளில் மிச்சம் மீதியுள்ள உலரள்களை தோலுரித்து காட்டி “குர்ஆன் தான் இறை வேதம்” என்பதை நிச்சயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல்லாஹ்வின் உதவியுடன் நிருபித்து காட்டும் இன்ஷா அல்லாஹ்.
- S.சித்தீக் M.Tech,
TNTJ STUDENTS WING.
source: www.tntj.net

தமிழக பட்ஜெட்: சிறுபான்மை மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்!




சென்னை மார்ச் 27:தமிழக அரசின் பட்ஜெட் இன்று வருவாய்த்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில் சிறுபான்மை மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.

சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் கல்வியில் உயர்வு பெறும் வகையில் அரசு பல்வேறு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.   2011‑2012 ஆம் ஆண்டில், 2,68,211 சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகையாக 39 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த 2012‑2013 ஆம் ஆண்டிற்கு 55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஹஜ் குழுவின் நிர்வாகச் செலவினங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையை பத்து லட்ச ரூபாயிலிருந்து இருபது லட்ச ரூபாயாக இந்த அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது.  2012‑2013 ஆம் ஆண்டும், உயர்த்தப்பட்ட இதே அளவில், மானியத் தொகை வழங்கப்படும்.

உலமாக்களின்(முஸ்லிம் அறிஞர்களின்) மாத ஓய்வூதியம் 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  2012-2013 ஆம் ஆண்டில் உலமாக்களின் நலவாரியத்திற்கு உதவி தொகையாக ஒரு கோடி ரூபாய் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டைப் போன்றே 2012-2013 ஆம் ஆண்டிலும் கிருத்துவர்கள் ஜெருசல நகரத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவேன் என அறிவித்திருந்தார். ஆனால், அதைப்பற்றிய தகவல் எதுவும் பட்ஜெட்டில் கூறப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

source: lalpetexpress

சிதம்பரம்; இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்



அல்லாஹ்வின் அருளால் 25.03.12 (ஞாயிற்றுக்கிழமை) மகரிப்பிற்கு பிறகு நமது பள்ளியில் வாரம் வாரம் நடை பெரும் மார்க்க விளக்க கூட்டம் .அதில்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் . கேள்விகளுக்கு  இமாம் ஹனீப் அவர்கள் பதில் அளித்தார்கள் ,.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லா 

சிதம்பரம் தைக்கால் பெண்கள் பயான்

சிதம்பரம் கிளை சார்பாக தைக்கால் பெண்கள் பயான்

 24.03.12 சனிக்கிழமை  அன்று இரவு 07.30 முதல் 08.30 வரை நகர தலைவர்  சேக் முஹம்மது தலைமையில்,  
' மறுமை நாள்' என்ற தலைப்பில் மவ்லவி ஹனீப்( இமாம் சிதம்பரம்) அவர்கள் உரை நிகழ்த்த அதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டார்கள்.  

மதரஸா-ஐனுள் ஹுதாவில் தேர்வு

சிதம்பரம்; 24.03.12 சனிக்கிழமை கொள்ளு மேட்டு தெருவில் உள்ள மதரஸா-ஐனுள் ஹுதா சிறுவர் பாடசாலையில் து ஆக்கள் பற்றிய தேர்வு நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் நடத்தினார்கள் ,இதில் 20.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வானார்கள் அல்ஹம்துலில்லா

கொடிபள்ளம் பெண்கள் பயான்

சிதம்பரம் கிளை சார்பாக கொடிபள்ளம் பெண்கள் பயான்

24.03.12 அன்று மதியம் 02.30 முதல் 04.30 வரை
  இறைவனிடம் கையேந்துவோம் என்ற தலைப்பில் மவ்லவி ஹனீப்( இமாம் சிதம்பரம்) அவர்கள் உரை நிகழ்த்த அதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டார்கள். 

மத்ஹபை ஏன் நீங்கள் பின்பற்றவில்லை

சிதம்பரம்; 24.03.12 சனிக்கிழமை  அன்று நமது பள்ளிக்கு வந்த சகோதரர்
மத்ஹபை ஏன் நீங்கள் பின்பற்றவில்லை
மற்ற ஜமாத்தை விட்டு ஏன் விலகி இருக்குறீர்கள்
தனி பள்ளி எதற்க்கு
என்று அவருடைய நீண்ட நாள் சந்தேகத்தை நமது பள்ளி இமாம் ஹனீப், மற்றும் கிளை செயலாளர் இப்ராஹீம் ஆகியோர் தெளிவான முறையில் விளக்கியதும் அவர் புரிந்து கொண்டு பிறருக்கும் இந்த சத்திய மார்க்கத்தை எடுத்து கூறுவோம் என்று மிகவும் ஆவலாக கூறினார்.   அல்ஹம்துலில்லாஹ்.


மர்க்கஸ்யை கும்மிட்ட மூதாட்டிக்கு தாவா



சிதம்பரம்; நமது மர்க்கஸ் வழியாக சென்ற மூதாட்டி மார்க்ஸ்யை பார்த்து கையெடுத்து கும்மிட்டவருக்கு, அது தவறு என்று சுட்டி காட்டி இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும். என்று நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் தாவா செய்தார்கள் நகர செயலாளர் இப்ராகிம் உடன் இருந்தார்கள்..

Friday, March 23, 2012

கடைக்குள் தாவா

சிதம்பரம்; மேல வீதியில் ஒரு கடையில் 22.03.12 மதியம் 03.00 மணிக்கு
நபி வழி மறந்து விட்டோமோ அன்று நமது பள்ளி இமாம் ஹனீப் ,கிளை செயலாளர் இப்ராஹிம்,அழைப்பு பனி செய்தார்கள்
அதை தொடர்ந்து ,பிற மத சகோதர்ரான சௌந்தர் ,குமார் ,கார்த்திக் ,முரளி ,போன்றவர்களுக்கும் கனிவான முறையில் அழைப்பு பனி செய்யபட்டது ,கேட்டவர்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கம் அற்புதமான மார்க்கம்
என்று பாராட்டினார்கள். புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.

அதை தொடர்ந்து காசு கடைத் தெருவில் நகை கடையில்
பித் அத் ஓர் வழி கேடு 
அன்ற தலைப்பில்.,நமது பள்ளி இமாம் ஹனீப், அவர்கள் அழைப்பு பனி செய்தார்கள்,கிளை செயலாளர் இப்ராஹிம் மாவட்ட பொருளாளர் A.K தாஜ்தீன் ஆகியோர் உடன் இருந்தார்கள்

சேலம் தவ்ஹீத் கல்லூரிக்கு பரிந்துரை கடிதம்

சிதம்பரம்; புதிதாக இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோதரருக்கு 22.03.12 அன்று மார்க்க கல்வி அறிந்து கொள்ள, மாவட்ட பரிந்துரை கடிதம் மற்றும் அவருக்கு தேவையான பொருள்கள் கொடுத்து சேலம் தவ்ஹீத் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Thursday, March 22, 2012

52,வருடமா இஸ்லாத்தை யாரும் எனக்கு சொல்லவில்லை !

சிதம்பரம் மார்கஸ் அருகில் 
21.03.12 புதன் கிழமை இரவு காளி முத்து என்பவருக்கு கிளை செயலாளர் இப்ராஹீம், நமது பள்ளி இமாம் ஹனீப், அவர்கள் அழைப்பு பனி செய்தார்கள்.மிகவும் ஆர்வமாக செவியுற்ற அவர் 52,வருடமா இஸ்லாத்தை யாரும் எனக்கு சொல்லவில்லை. என்று கவலைபட்டு அவர் TNTJ ஐ பாராட்டி விட்டு மீண்டும் வருகிறேன் அன்று கூறி விட்டு சென்றார்.

திரு குரான் வாழும் அற்புதம்

பெண்கள் பயான் 

சிதம்பரம்;லெப்பை தெருவில் ஒரு சகோதரி வீட்டில் 21.03.12 புதன் கிழமை மாலை திரு குரான் வாழும் அற்புதம் என்ற தலைப்பில் நமது பள்ளி இமாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லா.

கடை தெருவில் அழைப்பு பனி

சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகில் உள்ள ஒரு கடையில் 20.03.12 செவ்வாய் கிழமை இரவு கிளை செயலாளர் இப்ராகிம் ,நமது பள்ளி இமாம் ஹனீப், அவர்கள் சுவனம் செல்வதற்கு வழி காட்டும் தவ்ஹீத் ஜமாஅத் தான். என அழைப்பு பனி செய்தார்கள்.
அதை தொடர்ந்து கீழ வீதியில் மாணவர்களுக்கு தொழுகையை பேனுவோம்
 என்றும் அழைப்பு பணி செய்யப்பட்டது 

Tuesday, March 20, 2012

வீடுகளில் தாவா

சிதம்பரம்; அம்பலத்தாடி மடத்தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று 'அல்லாஹ்வை அஞ்சுவோம்' ,'நரகத்தை பயப்படுவோம்'
,'அல்லாஹ் ,ரசூலுக்கு கட்டு படுவோம்' என்று நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் அழைப்பு பணி செய்தார்கள்.

கடைத் தெருவில் தாவா



சிதம்பரம்; நகர செயலாளர்,இப்ராகிம் ,நகர பொருளாளர்,M.ஹனீப் அவர்கள் தலைமையில் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள கடைகளில்  ' அல்லாஹ்வை நினைவு கூறுவோம் ', 

'பாங்கிற்கு பதில் தொழுகை நிறைவேற்றுவது' என்று நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் அழைப்பு பணி செய்தார்கள்.

Monday, March 19, 2012

வாராந்திர பயான்

சிதம்பரம்; நமது மர்கஸ்ஸில் வாராந்திர பயான் 
 18.03.12 (ஞாயிற்றுக்கிழமை)  அன்று அல்லாஹ்வின் அருளால் நடை பெற்றது.
 அதில் லால்பட்டை இமாம் முபாரக் மறுமை சிந்தனை' என்ற தலைப்பிலும், 
S.சேக் முஹம்மது (tntj தலைவர் cdm).'பிராத்தனை' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

Sunday, March 18, 2012

சிதம்பரத்தில் வட்டார தர்பியா

சிதம்பரம் மர்கஸ்ஸில்;18.03.2012 அன்று மதியம் அஸர் தொழுகை க்கு பிறகு, பரங்கிப்பேட்டை ,பின்னத்தூர், சிதம்பரம், மற்றும், கிள்ளை TNTJ  நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு வட்டார தர்பியா நடை பெற்றது. 
அதில் லால்பட்டை இமாம் முபாரக் 'சொர்க்கத்தை நாடி நமது பணிகள்' என்ற தலைப்பிலும் ,
இமாம் யாசின் பெண்ணாடம் 'TNTJ செயல் திட்டங்கள்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 

கிள்ளையில் பெண்கள் பயான் !

கிள்ளை: அல்லாஹ்வின் கிருபையால் 17.03.2012 சனிகிழமை மாலை 6.30மணியளவில் மங்கள மேட்டு தெருவில் கிள்ளை கிளை சார்பாக 
 "ஆடம்பர உலகமும்,அழியாத மறுமையும்' என் தலைப்பில் மெளலவி முபாரக் (இமாம் லால்பட்டை)   உரை நிகழ்த்தினார்கள்.

பெண்கள் பயான்

சிதம்பரம் கிளை சார்பாக தைக்கால் பயான்.

பள்ளிப்படை தைக்கால் ; சிதம்பரம் அருகில் உள்ள தைக்கால்  17.03.12 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை குரான் ஹதிஸை பின்பற்றுவோம்  என்ற தலைப்பில் சகோ;ஹனீப் (tntj பள்ளி இமாம் சிதம்பரம் )  உரை நிகழ்த்தினார்கள். இதில்அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.   

பெண்கள் பயான்

சிதம்பரம்  கிளை சார்பாக  பின்னத்தூரில்  பயான்.

பின்னத்தூர்; சிதம்பரம் அருகில் உள்ள பின்னத்தூரில்  17.03.12 சனிக்கிழமை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை பெற்றோரை பேணுவோம் என்ற தலைப்பிலும்,மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோ;ஹனீப் (tntj பள்ளி இமாம் சிதம்பரம் )  உரை நிகழ்த்தினார்கள். இதில்அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.  

கடலூர் மாவட்ட பொதுக்குழு


அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட பொதுக்குழு பண்ருட்டியில் கடந்த 11.03.2012 அன்று மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோ. தவ்பீக் மற்றும் மாநில செயலாளர் சகோ.யூசுப் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மாவட்ட தலைவர் – D.முத்துராஜா –             +91 9600881313      
மாவட்ட செயலாளர் – A.நிஷார் அஹமது –             +91 9791640375      
மாவட்ட பொருளாளர் – தாஜீதீன் –             +91 9940862125