Friday, December 28, 2012

தவ்ஹீத் மார்கஸ்க்கு உதவி


சிதம்பரம்; 28.12.12 அன்று சிதம்பரம் கிளை சார்பாக கோவை மாவட்டம் GM நகர் கிளைக்கு  மர்கஸ்கட்டுவதற்காக   மொத்தம்-RS;18730.00  நிர்வாகிகள், வசம் கொடுக்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்!           

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை



சிதம்பரம்;.28.12.12 அன்று இமாம் முகம்மது யாசின்(பெண்ணாடம்} அவர்கள்
 'மறுமைக்கு சம்பாதிப்போம்' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

”நிர்வாகிகளின் பண்புகள்”- கிள்ளை கிளை தர்பியா


சிதம்பரம்; கிள்ளை கிளை சார்பாக கடந்த 22 12 2012 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மத் தம்பி மற்றும் சகோ.அப்துர் ரசாக் ஆகியோர் ”நிர்வாகிகளின் பண்புகள்” என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்


பெண்கள் பயான்- கிள்ளை 
சிதம்பரம்;18.12.12 அன்று மதியம் 04.00 மணியளவில் கிள்ளையில் 'இன்றைய பெண்களின் நிலை '  ;என்ற தலைப்பில் ஆலிமா சம்சுல் ஹுதா  அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான்- பின்னத்தூர்



சிதம்பரம்;23.12.12 அன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'தொழுகையின் அவசியம்'  ;என்ற தலைப்பில் இமாம் மவ்லவி சாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்


                                                              இரத்தம் தானம் 

சிதம்பரம்;.17.12.12 அன்று  பின்னத்தூரில் அறுவை சிகிச்சைக்காக கிளை நிர்வாகி சகோ;அன்சாரி அவர்கள் இரத்தம் கொடுத்தார்கள்.

Sunday, December 23, 2012

காவல் துறை அதிகாரிகளின் அடக்குமுறைகளைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)


விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகளை  கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ளயுத்தத்திற்குபதிலடிகொடுக்கும்மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
 எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நன்றி; தலைமை 

காவல் நிலைய முற்றுகைப் போராட்ட பத்திரிக்கை செய்திகள்


கடந்த 22.12.2012 அன்று நடைபெற்ற காவல் நிலைய முற்றுகைப் போராட்ட பத்திரிக்கை செய்திகள். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில்களில்…
Print This page

வாராந்திர பயான்-சிதம்பரம்

சிதம்பரம்;.23.12.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இமாம் மவ்லவி சாபி அவர்கள் 'மூட நம்பிக்கை' என்ற தலைப்பில்  உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, December 22, 2012

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை

சிதம்பரம்;.21.12.12 அன்று  அப்துல் ரஜாக் அவர்கள் 'கியாமத் நாளின் அடையாளம்' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, December 18, 2012

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது!



வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? என்ற கேள்விக்குறியோடு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்த பரபரப்பு செய்தி.
டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியும் என்று சொல்கின்றார்களே! இவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதை உண்மையில் சாத்தியமா? அவ்வாறு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய்திகளை யாராவது சொல்ல இயலுமா என்ற சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்ததுதான் இத்தகைய செய்திகளை இவர்கள் வெளியிடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
மறைவான விஷயங்களை எவராலும் அறிய இயலாது :
நாளை என்ன நடக்கவுள்ளது?. அடுத்த நிமிடம் என்ன நடக்க இருக்கின்றது? என்பதை அறியும் ஆற்றல் எந்த மனிதருக்கும் இல்லை. இதை சிந்திக்கும் திறன் படைத்த யாரும் விளங்கிக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்ற செய்தி எப்படி மற்ற மனிதர்களுக்குத் தெரியும் என்ற சாதாரண சிந்தனைத்திறன் இருந்தாலே இது மிகப்பெரிய கட்டுக்கதை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
அல்குர்-ஆன் 31 : 34
மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் படைத்த இறைவனைத்தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள இயலாது.
மற்றொரு இடத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்:
(முஹம்மதே) யுக முடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.
அல்குர்-ஆன் 79 : 42முதல் 45வரை
மறைவான செய்திகளை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருக்கின்றான். அப்படி சில மறைவான செய்திகளை தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்த இறைவன், தனது தூதருக்குக் கூட உலக அழிவு நாள் எப்போது வரும் என்ற செய்தியை அறிவித்துத்தரவில்லை என்றால் வேறு எந்த மனிதருக்காவது இந்த செய்தியை அறிந்து கொள்ள இயலுமா?
அதுமட்டுமல்லாமல், வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கக்கூடிய முன்னறிவிப்புகளின் அடிப்படையிலும், நபிகளார் கூறிக்காட்டியுள்ள முன்னறிவிப்பின் படியும் உலக முடிவு நாள் என்பது இரண்டு மூன்று நாட்களில் நடந்து முடிந்துவிடாது. அது வருவதற்குண்டான சில அடையாளங்களை அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிச் சென்றுள்ளார்கள். எண்ணற்ற சிறிய அடையாளங்களும், மாபெரும் பத்து அடையாளங்களும் நிகழாதவரை உலக அழிவுநாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
அந்த பத்து அடையாளங்களாவன :
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – ஈஸா நபியின் வருகை
4 – யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
5 – அதிசயப் பிராணி
6 – மேற்கில் சூரியன் உதிப்பது
7, 8, 9 – மூன்று பூகம்பங்கள்
10 – பெரு நெருப்பு
மேற்கண்ட பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுக முடிவு நாள் ஏற்படாது. (குறிப்பு : உலக அழிவு நாள் ஏற்படப்போவதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும், அது குறித்த முழுமையான முன்னறிவிப்புகள் குறித்தும் முழுவதுமாக அறிய விரும்புவோர் சகோதரர் பீஜே அவர்கள் எழுதியுள்ள “கியாமத் நாளின் பத்து அடையாளங்கள்” என்ற நூலை பார்வையிடவும்)
இவை அனைத்தும் நிகழ்வதற்கு முன்பாகவே உலக அழிவு நாள் ஏற்படும் என்று யாரேனும் சொன்னால் அவர் பொய்யர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லிவிடலாம்.
டிசம்பர் 21ஆம் தேதிக்குப்பிறகும் உலகம் அழியாமல் இருக்கும் எனபதே உண்மை. இந்த அறிவு இல்லாமல் மக்களிடம் பீதியைக் கிளப்பி ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி காசு பார்க்கின்றன.
மாயன் காலண்டர் என்னும் மடத்தனமான காலண்டர்:
டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம்தான் மிகவும் வேடிக்கையானது. மாயன் காலண்டர் எனும் காலண்டர் பிரகாரம் 2012ஆம் ஆண்டின் டிசம்பர் 21ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்பதுதான் அவர்கள் கூறும் வேடிக்கையான காரணம்.
அது என்ன மாயன் காலண்டர்?:
கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம் தென்அமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்த​வர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனராம். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் காலண்டராம்.
தென்அமெரிக்காவில் வாழ்ந்த மாயா சமூகத்து மக்கள் பயன் ​படுத்திய காலத்தின் கணக்கு முறைகளைக் கொண்டு இந்தக் காலண்டர் உருவாக்கப்பட்டதாம். கி.மு. 3113 தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி மாயன் காலண்டர் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு அந்த காலண்டரில் தேதிகள் இல்லையாம். வான சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்த(?) மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள், 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியுடன் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? “அதற்குப் பிறகு இந்த உலகமே இருக்காது என்பதுதான் மாயன் காலண்டர் சொல்லும் ரகசியம்” என்று பக்கம் பக்கமாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் பத்திரிக்கையாளர்கள்.
மாயன் என்ற மூடர்கள் கூட்டம் தங்களது காலண்டரில் 2012 ஆம் ஆண்டின் டிசம்பர் 21ஆம் தேதிக்குப் பிறகு 22ஆம் தேதியை குறிப்பிடாததால் உலகம் அழியப்போகின்றது என்று எவனாவது நம்பினால் அவனைவிட மிகப்பெரிய முட்டாள் இந்த உலகத்தில் யாரும் இருக்க இயலாது. மாயன் கூட்டம் என்ற மூடக்கூட்டம் முட்டாள் கூட்டம்தான் என்பது டிசம்பர் 22ஆம் தேதி நிரூபணமாகிவிடும்.
இந்த கூறுகெட்ட கூட்டம் கூறுவது எப்படி உள்ளது என்றால், சிறுகுழந்தைகள் கையில் காலண்டரை வைத்துக் கொண்டு தினம் தினம் ஒரு டெய்லி காலண்டர் தேதியை தேதிவாரியாக கிழிப்பதற்கு பதிலாக மொத்தமாக ஒரு மாதத்தின் தேதியை முன்கூட்டியே கிழித்துவிட்டு, ஒருமாதம் கடந்து விட்டது என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இதுவும் உள்ளது.
மேலும் நம்ம ஊர் பத்திரிக்கையாளர்களுக்குச் சொல்லவே வேண்டாம். வெறும் வாய்க்கு அவுல் கொடுத்தது போல, ஒரு புரளி விஷயம் கிளப்பிவிடப்பட்டால் தங்களால் இயன்ற அளவு அதை பரப்பி புளகாங்கிதம் அடைவார்கள். மக்கள் பீதியடைவதில் அவர்களுக்கு என்னே சந்தோசம்?.
உள்ளூர் புரளி:
உலகம் அழியப்போகின்றது என்ற புரளி கிளம்பியதும்தான் கிளம்பியது நம்ம தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளோடு அதை முடிச்சுப்போட்டு பரப்பிவிட்டு அதில் லாபம் அடையும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறின.
தங்கள் பங்குக்கு புருடா விட்ட புண்ணியவான்கள்(?):
இந்த பரபரப்பு புரளி குறித்து பத்திரிக்கையாளர்கள் ஜோசியக்காரர்களிடம் சென்று குறிகேட்டு அதையும் வெளியிட்டுள்ளார்கள்.
உலகம் அழியும் என்று சொல்லப்படுவது குறித்து பிரபல ஜோதிடரான கே.பி.வித்யாதரனைச் சந்தித்து கேட்டார்களாம். அதற்கு அவர் கொடுத்த புரூடா இதோ:
“சனி, ராகு இரண்டும் மக்களுக்குத் தொல்லையை உண்டாக்கக்கூடிய கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்வது அபூர்வம். ஆனால் இப்போது சேர்ந்து இருக்கின்றன. இதனால் பேரழிவுகள் நிச்சயம் இருக்கும். விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். மனசாட்​சிக்கு விரோதமான செயல்கள் நடக்கும்.
2014 ஜூன் மாதம் வரை இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்ந்து இருக்கின்றன என்பதால், அதுவரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மேஷம், துலாம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்குதான் இந்தக் கிரக மாற்றம் அதிக அளவிலான பிரச் னைகளையும் சோதனைகளையும் கொடுக்கும்.
இந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் அசாதாரண திறமையுடன் இருப்பார்கள். ஆனாலும், குழந்தை​களின் உடல்​நலனில் அக்கறை காட்டு​வது அவசியம். மற்றபடி ஒரே நாளில் உலகம் அழியும் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. நம் ஜோதிடத்திலும் அப்படிக் குறிப்பிடவில்லை” என்று அவர் சொன்னாராம்.
பேரழிவுகள் ஏற்படும் என்று சொல்லிவிட்டு அதில் மேஷம், துலாம், மீனம் ராசிக்காரர்களைத்தான் அது பாதிக்கும் என்று சொல்வதிலிருந்தே இது எவ்வளவு பெரிய கடைந்தெடுத்த பொய் என்பதை அனைவரும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம். ஒரு மிகப்பெரிய சுனாமியோ, பூகம்பமோ வருவதாக வைத்துக் கொள்வோம். அதில் இவர் குறிப்பிட்ட மேஷம், துலாம், மீனம் ராசிக்காரர்கள் மட்டும்தான் சாவார்களா? வேறு ராசிக்காரர்களோ, அல்லது ராசியே பார்க்காதவர்களெல்லாம் சாகமாட்டார்களா என்ன?
இந்த ஜோதிடக்காரர்களிடத்திலேயே கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் நடந்து இவர்கள் போய் காவல்துறையில் புகார் கொடுத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ள நிலையில் இவர்கள் உலக அழிவு குறித்து ஜோசியம் சொல்வது உண்மையிலேயே மகா காமெடிதான்.
இதே போல இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரமணனிடமும் கேள்வி கேட்டுள்ளனர் பத்திரிக்கையாளர்கள். அது சந்தேகம்தான் என்று அவர் தனது பங்குக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். மழை வருமா? வராதா என்பதையே சரியாகச் சொல்லத்தெரியாதவர்கள் உலக அழிவு நாளைப் பற்றி சொல்லப்போகின்றார்களா என்ன? அந்த கேள்விக்கும் வரும் ஆனா வராது என்ற பாணியில்தான் அவர் பதிலளித்துள்ளார்.
கி.பி இரண்டாயிரமாம் ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்று இதற்கு முன்பாக இதுபோல ஒரு புரளியை கிளப்பினார்கள். அதுபோல இப்போது இந்தப் புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள்.
இப்படி உலகமே மூடநம்பிக்கையிலும், பீதியிலும் உரைந்துள்ள இவ்வேளையில் உண்மையான முஸ்லிம்களுக்கு இந்த புரளி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதே இஸ்லாம்தான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம்.

நான் முஸ்லிம் தஃவா

சிதம்பரம்; 15.12.12 அன்று மூர்த்தி என்ற சகோதரர்க்கு 'ஒரே கடவுள்' என்ற கொள்கையை  இமாம் அவர்கள் விளக்கினார்கள்.அவர்களுக்கு இறைவன் நேர் வழி காட்டுவானாக.

வாராந்திர பயான்-சிதம்பரம்


சிதம்பரம்;.16.12.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. அப்துல் ரஜாக் அவர்கள் 'அழகிய முன்மாதிரி நபிகள் நாயகம்' என்ற தலைப்பில்  உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, December 16, 2012

நீருக்குள் பிரசவம்


பிரசவ வலி அவரை பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ‘நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா’ என்று அவர் கூறினார். ‘கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
(அல்குர்ஆன் 19: 23,24)
பிரசவ வேதனை என்பதுஒருபெண்ணை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்லும். அந்த நேரத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு வேதனையை அந்த பெண் உணர்வாள். 
மனித உடலின் வலியை அளக்கும் அலகு டெல் ஆகும். மனித உடல் தாங்கக்கூடிய அதிகூடிய வலியின் அளவு 45 டெல் (del). ஆனால், பிரசவத்தின் போது ஒரு பெண்ணுக்கு 57 டெல் வரை வலி அதிகமாகும். இவ் வலி 20 இடங்களில் என்பு முறிந்தால் ஏற்படும் வலிக்கு சமனாகும். ஒரு மனிதனால் தாங்கக்கூடிய அதிகூடிய வலியின் அளவை விட அதிக வலியை ஒரு பெண் தன் பிரசவ வேதனையில் உணர்கிறாள்.
மேலுள்ள அல்குர்ஆன் வசனம் பிரசவ வேதனையை குறைக்கக்கூடிய ஒரு வழிமுறையை கற்றுத் தருகின்றது.
மர்யம் (அலை) பிரசவ வேதனையால் ‘நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா’ என்று கூறிய சமயத்தில் ‘கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். இதிலிருந்து அவரது வேதனையைக் குறைப்பதற்கே ஊற்று ஏற்படுத்தப்பட்டது எனத் தெளிவாகின்றது. நீருக்கு பிரசவ வேதனையை குறைக்கும் தன்மை உள்ளது என்பது இதிலிருந்து புலனாகின்றது.
நீருக்குள் பிரசவம்
நீருக்குள் பிரசவம் என்பது வெதுவெதுப்பான நீர் தொட்டிக்குள் குழந்தையை பிரசவிக்கும் முறையாகும். இதன் கோட்பாடு குழந்தை தாயின் கருவறையில் அம்னியன் திரவப் பையில்(amniotic fluid sac) இருந்து தனக்கு ஒத்த சூழலான தண்ணீருக்குள் பிரசவிக்கும் போது குழந்தை இலகுவான முறையில் பிரசவிக்கப்படும். தாய்க்கும் மன அழுத்தம் குறைவாக இருக்கும். நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் தாயின் மன அழுத்தமும், பிரசவ வேதனையும் குறைகின்றன என் அறியப்பட்டுள்ளது.

நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் தாய்க்கு ஏற்படும் நன்மைகள் 
•    இளம் சூடான நீர் வலியைக் குறைக்கக்கூடியதாகவும், இதமானதாகவும் இருக்கும்.
•    பிரசவத்தின் இறுதிக் கட்டத்தில் நீரானது அத்தாய்க்கு ஒரு ஆற்றலைக் கொடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
•    இந்த மிதப்பின் விளைவானது தாயின் அங்க அசைவுகளுக்கு இலகுவாகவும், தாயின் உடல் எடையைக் குறைக்கக்கூடியதாகவும் இருக்கும்.
•    நீரில் மிதக்கும் தன்மை கருப்பை தசைகளின் சுருக்கத்திற்கும், ஒக்ஸிஜனைக் கொண்ட இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கின்றது. இதனால் தாய்க்கு வலி குறைகின்றது. குழந்தைக்கும் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகின்றது.
•    நீரில் அமிழ்ந்திருப்பதால் பதட்டம் காரணமாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் குறைகின்றது.
•    நீரானது மன அழுத்தம் தொடர்பான ஹோர்மோன்கள்(hormones) உருவாகுவதைக் குறைத்து எண்டோர்பின் (endorphins) எனும் வலி தடுப்பான்கள் உருவாக இடமளிக்கும்.
•    நீரானது குழந்தை வெளியேறும் அப்பகுதிக்கு மீள் தன்மையையும், இலகுவையும் கொடுத்து தையல் தேவையை குறைக்கின்றது.
•    உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் நீரானது தாய்க்கு மன அமைதியைக் கொடுக்கும்.
•    இம் முறை மூலம்; பதட்டம், அச்சம் குறைவடைகின்றது.
நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்
•    கருப்பையிலுள்ள அம்னியன் பைக்கு ஒத்த சூழலை நீர் வழங்குகின்றது.
•    நீரானது குழந்தை பிரசவிக்கும்; போது பிரசவத்தை எளிதாக்கி குழந்தையின் மன அழுத்தத்தைக் குறைத்து பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது.
மேலுள்ள அத்தனை தகவல்களும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டவை. 1970 இல் ரஷ்யா மற்றும் பிரான்சில் சில தாதிகளும், மருத்துவர்களும் குழந்தை கருப்பையிலிருந்து சுமுகமான முறையில் வெளி உலகுக்கு வருவதற்கு நீருக்குள் பிரசவ முறைக்கு ஆர்வம் காட்டினர். அவர்கள் பெண்கள் பிரசவ வேதனையால் துடிப்பது குறித்து கவலையடைந்தனர். இன்று ஐக்கிய இராட்சியம் உட்பட அநேக ஐரோப்பிய நாடுகளில் இந்த நீர் தொட்டியில் பிரசவ முறை கையாளப்படுகின்றது.
அல்குர்ஆனே நீருக்குள் பிரசவ முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது
விஞ்ஞான தகவல்களின் மூலம் முதன்முதலில் நீருக்குள் பிரசவ முறை 1970 களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 1400 வருடங்களுக்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்குர்ஆனில் நீருக்குள் பிரசவ முறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தறிவே இல்லாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் விஞ்ஞான அறிவு என்பது பூச்சியமே. எனவே, அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை அல்லாமல் வேறில்லை என்பது அல்குர்ஆனை படிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் புரியாமல் போகாது.

கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது எப்படி?நோட்டீஸ் விநியோகம் –சிதம்பரம் கிளை



சிதம்பரம்; 14.12.12 அன்று சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக'முஸ்லிகளின் சீண்டும் கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது எப்படி?  நோட்டிஸ் சிதம்பரத்தில் முக்கிய வீதிகளில் கிளை நிர்வாகிகள் விநியோகம் செய்தார்கள்.

Friday, December 14, 2012

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை

சிதம்பரம்;.14.12.12 அன்று இமாம் யாசிர்அரபாத்(தொண்டி)அவர்கள்
 'குரான் ஹதிஸை பின்பற்றுவோம்' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, December 12, 2012

பெண்கள் பயான்- பின்னத்தூர்



 சிதம்பரம்;09.12.12 அன்று மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'இறையச்சம்'  ;என்ற தலைப்பில் முஹமது ஆதம் (தலைவர் சிதம்பரம் கிளை அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 11, 2012

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.09.12.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இமாம் முஹமது மிசால் அவர்கள் 'நபிகளாரின் தனி சிறப்பு என்ற தலைப்பில்  உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, December 9, 2012

நீடுரில் நடைபெற்ற மார்க்கவிளக்க கூட்டம்!




நீடுர், டிச 09: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூர் நெய்வாசலில்  மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் 08.12.2012 அன்று மாவட்ட தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ”விவாத அரங்கமும் விதண்டாவாதமும்”என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் ”சத்தியமே வெல்லும்” என்ற தலைப்பிலும் எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்! 

இக்கூட்டத்தில் இரண்டு பிறமதத்வர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டனர். ஒரு சகோதரி தனது பெயரை ஆயிஷா என மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்டார். அதைப்போல் இன்னொரு சகோதரர் தனது பெயரை ரபிக் என மாற்றி கொண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்டார். அல்லாஹ் அக்பர்!

மேலும், இக்கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரி உள்பட திரு குர்ஆன் வழங்கப்பட்டது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கடும் பணியை கூட பொருட்படுத்தாமல் சிறப்புரைகளை கேட்டு பயன் அடைந்தனர்.



BSNL, IDEA, VODAFONE "ஏகத்துவ" CALLER TUNES -யை அறிமுகப்படுத்தியுள்ளது!




கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏகத்துவ காலர் ட்யூன்களை (CALLER TUNES) பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்திய செய்தியை உணர்வு இதழில் வெளியிட்டிருந்தோம்.

பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள ஏகத்துவ காலர் ட்யூன்கள் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.
அதைத்தொடர்ந்து தற்போது வோடோஃபோன் (VODAFONE) மற்றும் ஜடியா (IDEA) நிறுவனங்களும் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

பீஜே அவர்கள் உரையாற்றிய, 'இதுதான் இஸ்லாம்' என்ற தலைப்பிலான உரையிலிருந்து 20 தலைப்புகள் காலர் ட்யூன்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வோடோஃபோன் [ VODAFONE ] வாடிக்கையாளர்கள் காலர் ட்யூன்களை ஆக்டிவேட் செய்ய:
கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் விரும்பும் காலர் ட்யூன் கோடு நம்பரை உங்கள் மொபைலில் டைப் செய்து டயல் பட்டனை பிரஸ் பண்ணினால் நீங்கள் விரும்பும் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும்.
ஐடியா [ IDEA] வாடிக்கையாளர்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை ஆக்டிவேட் செய்ய:
DT என்று டைப் செய்து இடைவெளி விட்டு கீழ்க்கண்ட பட்டியலில் தாங்கள் விரும்பும் தலைப்பிலான காலர் ட்யூன் கோடு நம்பரை டைப் செய்து 55456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நீங்கள் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும்.
பி.எஸ்.என்.எல் [ BSNL] வாடிக்கையாளர்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை ஆக்டிவேட் செய்ய:
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக தாங்கள் இருப்பீர்களானால், கீழ்க்கண்ட தலைப்புகளில் தங்களுக்கு விருப்பமான தலைப்பிற்கான கோடு எண்ணை 56700 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் நீங்கள் விரும்பும் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும்.
குறிப்பு : பி.எஸ்.என்.எல். மற்றும் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஏகத்துவ காலர் ட்யூன் கோடு நம்பர்கள் ஒரே கோடு நம்பர்கள்தான்.
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் 56700 என்ற எண்ணுக்கும், ஐடியா வாடிக்கையாளர்கள் DT என்று டைப் செய்து இடைவெளி விட்டு குறிப்பிட்ட கோடு நம்பர்களை டைப் செய்து 55456 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
ஏர்செல் [ AIRCEL ] மற்றும் ஏர்டெல் [ AIRTEL ] ஆகியவற்றில் வெகுவிரைவில் ஏகத்துவ காலர் ட்யூன்கள் அறிமுகம்:
பி.எஸ்.என்.எல், வோடோஃபோன், ஐடியா ஆகிய செல்பேசி நிறுவனங்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஏர்செல் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் கூடிய விரைவில் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மார்க்கத்திற்கு முரணான கண்ட சினிமா பாடல்களை வைப்பதற்கு பதிலாக இந்த காலர் ட்யூன்களை வைத்தால் ஒரு தஃவாக அமையுமோ? செய்யலமா?
[CLEAR VIEW CLICK THE IMAGE]


Saturday, December 8, 2012

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து பி.ஜே அவர்கள் VHP உடன் நேருக்கு நேர் விவாதம் (Video)

கடந்த 6-12-2012 அன்று கேப்டன் நியுஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு VHP உடன் விவாதம் செய்தார்கள். அதன் வீடியோ ஆன்லைன்பிஜே வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.

Friday, December 7, 2012

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை


சிதம்பரம்;.07.12.12 அன்று  அப்துல் ரஜாக் அவர்கள் 'மாமனிதரின் தனிச்சிறப்பு' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, December 6, 2012

' பாபர் மஸ்ஜித் டிசம்பர் 6” கேப்டன் செய்தி டிவியில் விஹெச்பியுடன் பிஜே அவர்களின் நேரடி விவாதம்




சென்னை, : இன்ஷா அல்லாஹ்  பாபர் மசூதி இடிப்புதினமான ”டிசம்பர் 6”  அன்று இந்திய நேரம் மாலை 4.00 முதல் 5.00 மணி வரை 
கேப்டன் செய்தி டிவியில் (CAPTAIN NEWS CHANNEL) பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து விவாதம் நடைபெறவுள்ளது இன்ஷாஅல்லாஹ் இந்த நேரடி ஒளிபரப்பில் VHP தலைவர்களுடன் 

அனைவரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து பாபரி மஸ்ஜித்தின் உண்மை வரலாறை அறிந்து கொள்ளுங்கள்.

நீங்களும் பாருங்கள், பிறரையும் பார்க்கத் தூண்டுங்கள்! இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!

ஆன்லைனில் பார்க்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்


நன்றி; ஆன்லைன் பிஜே 

டெங்கு கொசு மருந்து அடித்தல் - பின்னத்தூர்


சிதம்பரம்; 02.12.12 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்னத்தூர் கிளை சார்பாக பின்னத்துர் பகுதியில் டெங்கு கொசு மருந்துகளை கிளை நிர்வாகிகள் அடித்தார்கள்,இதை அனைத்து தரப்பு மக்களும் கிளை நிர்வாகிகளை பாராட்டினார்கள் அல்ஹம்துலில்லாஹ். 

ஆண்கள் பயான்- பின்னத்தூர்

 சிதம்பரம்;02.12.12 மதியம் 03.00 மணியளவில் பின்னத்தூரில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில்'இறையச்சம்   ;என்ற தலைப்பில் இமாம் முஹமது மிசால் அவர்கள் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான ஆண்கள்,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

Monday, December 3, 2012

வாராந்திர பயான்-சிதம்பரம்

மரண சிந்தனை தொடர் பயான் 

சிதம்பரம்;.02.12.12 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இமாம் மவ்லவி சாபி அவர்கள் 'மரண சிந்தனை'(தொடர்என்ற தலைப்பில்  உரைநிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.