Wednesday, May 29, 2013

தனி நபர் தாவா -சிதம்பரம் கிளை




சிதம்பரம் ; 29.5.2013 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளை சார்பாக  தனி நபர் தாவா செய்யப்பட்டது  கா[பா மீது சத்தியம் செய்யலாமா என்று மாற்று மத சகோதரர் தமிழ் செல்வன் SBCID அவர்களுடைய கேள்விக்கு நமது கிளை நிர்வாகி ஆதம் விளக்கம் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

தனி நபர் தாவா -சிதம்பரம் கிளை


சிதம்பரம் ; 27.5.2013 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளை சார்பாக  தனி நபர் தாவா செய்யப்பட்டது  அதில் பேய் பிசாசு இருக்க? என்ற கேள்விக்கு நமது பள்ளி இமாம் விளக்கம் அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் —

தனி நபர் தாவா -சிதம்பரம் கிளை


சிதம்பரம் ; 27.5.2013 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சிதம்பரம் கிளை சார்பாக  தனி நபர் தாவா செய்யப்பட்டது அதில் தொழுகையில் விரலசைக்கலாமா? என்ற கேள்விக்கு பதில்லலிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நாம் எந்த அளவுக்கு நன்மையை ஏவி தீமையை தடுத்துக்கொண்டியிருக்கிறோம் என்று கவனித்து பார்க்கட்டும் இன்ஷா அல்லாஹ முடிந்தவரை தாவா பனியை செய்வோம்

Monday, May 27, 2013

தெருமுனை கூட்டம்-சிதம்பரம் கிளை






சிதம்பரம்;26.05.13 அன்று அம்மலதாடி மடத்தெருவில்TNTJ மர்கஸ் வளாகத்தில்     இரவு7.00மணிக்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தெரு முனை கூட்ட்டம் நடைபெற்றதுஇதில் மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் முன்னிலையில்,இமாம் இப்ராகிம்  பிர்தௌசி அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி  என்ற தலைப்பிலும் ,மற்றும் இமாம் செங்கம் M.ஷாஹித் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இந்நிகழ்ச்சிக்கு ஆதம் கிளை தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்இதில் ஆண்கள்மற்றும்  பெண்கள் அதிகம்பேர் கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ.

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு!-சிதம்பரம் கிளை


தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு என்று வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் ,TNTJ மாநில தலைமையின் சான்றிதழ் மற்றும் மனனம் செய்வோம், துஆக்களின் தொகுப்பு ஆகிய புத்தங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்மதுலில்லாஹ்!












Friday, May 24, 2013

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – சிதம்பரம் கிளை


சிதம்பரம்; 22.05.13 அன்று மாணவனுக்கு ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது.

நான் முஸ்லிம் தாவா--சிதம்பரம்;


சிதம்பரம்; 24.05.13 அன்று தமிழ் என்ற சகோதரர்க்கு,நமது கிளையின் நிர்வாகிகள் இஸ்லாம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு, குரான் தமிழாக்கம்,மற்றும் DVD க்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, May 21, 2013

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு -சிதம்பரம்



சிதம்பரம்; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளையின் கோடைகால பயிற்சி முகாம் (11.05.2013) தொடங்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடந்து (20.05.2013) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நிறைவு பெற்றது

மாநில தலைமை மூலம் வரவழைக்கப்பட்டுள்ள அழைப்பாளர் சகோ.சகோ;M.ஷாகித்(செங்கம்) அவர்கள் பயிற்சியினை வழங்கினார்கள்.

இந்த பயிற்சி முகாமில் இஸ்லாமிய அடிப்படை, தொழுகை பயிற்சி, துஆக்கள் மனனம் மற்றும் பேச்சி பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டது

60-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .

இன்ஷாஅல்லாஹ் பயிற்சி முடிந்து சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

Monday, May 20, 2013

வாராந்திர பயான்-சிதம்பரம்


சிதம்பரம்;.19.05.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ;M.ஷாகித்(செங்கம்
அவர்கள் ;நரகவாசிகளின் நிலை; என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான்- பூதகேணி



சிதம்பரம்;18.05.13 அன்று இரவு  07.00 மணியளவில் பூதகேணியில்    உள்ள முஸ்தபா நகரில் ஒரு சகோதரர் வீட்டில் சகோ;ஆலிமா சபீனா அவர்கள்  'குழந்தை வளர்ப்பு ' என்ற தலைப்பில் மற்றும்  சகோ;ஆலிமா சமீம் அவர்கள் 'நாவை பேணுதல்' என்ற தலைப்பில் மற்றும்.சகோ;M.ஷாகித்(செங்கம்)  அவர்கள் ;இஸ்லாத்தின் அடிப்படை '  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் ,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்


Friday, May 17, 2013

ஆலிமாக்கு ஹதீஸ் புக் வழங்குதல் -சிதம்பரம்


சிதம்பரத்தை சேர்ந்த ஆலிமா சகோதரிகள் சபீனா ,சமீம் அவர்களுக்கு சிதம்பரம் கிளை சார்பாக புஹாரி ,மற்றும் புத்தகம்,அவர்களின் தகப்பனாரிடம் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை




சிதம்பரம்;.17.05.13 இதில் சகோ; .M.சாகித்(செங்கை)   அவர்கள்   'தொழுகையின் சிறப்பு  ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, May 14, 2013

துஆ மட்டும் போதும்



துஆ மட்டும் போதும் அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள். என் மீது அன்பு வைத்திருந்த கொள்கைச் சகோதாரர்கள் மட்டுமின்றி கொள்கையில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட முறையில் என்மீது மதிப்பு வைத்திருந்த சகோதரர்களும் ஆங்கில மருத்துவம் தான் சரியானது எனவும் வலியுறுத்தினார்கள். அமெரிக்கா போகலாம். லண்டன் போகலாம். சிங்கப்பூர் போகலாம் எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பல சகோதரர்கள் முன்வந்தனர். ஏழை எளிய மக்கள் கூட எனது நிலத்தை விற்றுத் தருகிறேன்; நகையை அனுப்புகிறேன் என்றெல்லாம் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். என் உறவினர்களில் எவ்வளவு செய்வதற்கு தகுதிபடைத்தவர்கள் உள்ளனர். மனமகிழ்வோடு செலவு செய்ய அவர்கள் தாயாராக இருந்தனர். அவர்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது என்றாலும் அந்த உதவிகளை நான் கன்னியமான முறையில் மறுத்து விட்டேன். எனது மருத்துவ வகைக்காக பணமாகவோ பொருளாகவோ எந்த உதவியும் யாரிடமும் நான் பெறவில்லை. அதை நான் விரும்பவில்லை. அறுவை சிகிச்சை செய்வதற்கு நான் உடன்படாததற்கு இரணடு காரணங்கள் இருந்தன. எனது குடும்பத்தில் சிலருக்கு கேன்சர் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் அதிகமாகப் பரவி அவர்கள் மரணித்ததைக் கண்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம் ஒரு காரணம். அறுவை சிகிச்சை என்றால் அதைப் பலரும் அறியும் நிலை ஏற்பட்டு எனக்கு உதவ முன்வருவார்கள்., என்னைக் கேட்காமலே எனக்கு உதவுவார்கள். அடிக்கடி நோய் விசாரிப்பார்கள். மருத்துவமனையில் அத்கிமானோர் குழுமி நோயையும் ஒரு பந்தாவாகக் காட்டும் நிலை ஏற்படும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதும் கூடுதல் காரணம். எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போம் என்று மாற்று மருத்துவ முறைகளைப் பல மாதங்கள் கடைப்பிடித்து வந்தேன். ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதுடன் கேன்சர்கட்டியின் அளவு தாறுமாறாக அதிகரித்தும் வந்தது. விசாரிப்பவர்களிடம் நன்றாக உள்ளது என்று சொல்லி அவர்கள் எனக்காக கவலைப்படுவதைத் தவிர்த்து வ்ந்தேன். ஆனால் அதன் பாதிப்புகள் அதிகரித்து வருவதை உண்ர்ந்த போது எனக்கு ஏற்பட்டுள்ள வகை கேன்சருக்கு மாற்று மருத்துவம் இல்லை என்று எனக்கு தாமதமாகத் தோன்றியது. எனவே அறுவை சிகிச்சை செய்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் இதை ஒருவருக்கும் சொல்லாமல் செய்தால் தான் மேலே சொன்ன விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று கருதி என் மனைவி என் கடைசி மைத்துனன் தவிர யாருக்கும் சொல்லாமல் பிரபலமில்லாத ஒரு மருத்துவமனையில பிரபலமான டாக்டர் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்காக அட்மிட் ஆனேன். ராஜபாளயம் நிகழ்ச்சியை நேற்று முடித்து விட்டு புறப்பட்டு இன்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஆப்ரேஷன் செய்து கொண்டேன். காலை 11.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை நான்கு மணி நேரம் ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. அல்ஹ்மது லில்லாஹ். மாநில நிர்வாகிகளுக்கோ, உறவினர்களுக்கோ, வேறு நண்பர்களுக்கோ இதை நான் தெரிவிக்கவில்லை. என்னைப் பார்க்க வருவதற்காக அவர்கள் செலவு செய்து வருவதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை நான் அறிவேன் மேலும் மருத்துவ மனையில் கூட்டமாக குழுமி அது ஒரு செய்தியாகவும் பரபரப்பாகவும் ஆகிவிடக் கூடாது என்பதாலும். ஒருவருக்கும் சொல்லவில்லை ஆபரேஷன் முடிந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் தான் மாநில நிர்வாகிகளுக்கும் உறவினர்களுக்கும் நல்லபடியாக சிகிச்சை முடிந்ததைத் தெரிவித்தேன். துன்பம் நேரும் போது மற்றவர்களின் ஆறுதலை அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இயல்பாகவே எனக்கு துன்பங்கள் நேரும் போது யாரும் அனுதாபம் காட்டினால் அது குறித்து அக்கறை காட்டினால் அது எனக்கு ஆறுதலைத் தருவதற்கு பதிலாக சங்கடத்தையே ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே நான் இது போன்ற விசாரணைகளை விரும்புவதில்லை. எது நடந்தாலும் நானே இலேசாக எடுத்துக் கொள்ளும் போது ஆளாளுக்கு ஏன் பயம் காட்டுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. எனவே தான் நான் ஒருவருக்கும் சொல்லாமல் என் சொந்தச் செலவில் யாருடைய உதவியையும் தயவையும் நாடாமல் நானே அல்லாஹ்வின் அருளால் என் பிரச்சனைக்கு என்னால் இயன்ற தீர்வைக் கண்டுள்ளேன். ஆப்ரேஷன் முடிந்து நான் மனஉறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். இதனால் தான் நானே உட்கார்ந்து இதை கம்போஸ் செய்து நானே இணைய தளத்தில் ஏற்ற முடிந்தது. இதை நான் அனைவருக்கும் தெரிவிக்கக் காரணம் மாநில நிர்வாகிகளிடமும் என் குடும்பத்தாரிடமும் ஏன் ஒருவருக்கும் சொல்லவில்லை என்று யாரும் கேட்டு அவர்களைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பது தான். அவர்களுக்கே நான் சொல்லாத போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆங்கில மருத்துவர்கள் இதன் மூலம் பூரண குணமடைய 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் மனிதர்கள் தான். அவர்கள் கூறுவது போல் குணமடைய உங்கள் அனைவரின் துஆ மட்டும் போதும். நான் வேண்டுவது உங்கள் துஆவை மட்டும் தான் அன்புடன் பீ.ஜைனுல் ஆபிதீன்

Article Copied From: www.onlinepj.com , Read more at:http://onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/dua_mattum_pothum/
Copyright © www.onlinep

Sunday, May 12, 2013

இந்த வாரம் கேபிள் டிவியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -சிதம்பரம்


                                          12.05.13 அன்று 
             இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்(பண்ருட்டி)  

சிதம்பரம்;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக ஒவ்வொரு வாரமும்  ஞாயிற்றுக் கிழமை காலை 10.மணி முதல் 11 மணி வரை உள்ளூர் கேபிள் ATN டிவியில்  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செயபடுகிறது.தொடர்ந்து ஒலிபரப்பாக துவா செய்யுங்கள் -அல்ஹம்துலில்லாஹ்

வாராந்திர பயான்-சிதம்பரம்



சிதம்பரம்;.12.05.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ; .M.சாகித்(செங்கை) அவர்கள் ;மஃஷர் மைதானத்தில் மனிதனின் நிலை; என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

கோடைக்கால பயிற்சி முகாம்!-சிதம்பரம் கிளை




சிதம்பரம்;11.05.13 அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளையின் கோடைகால பயிற்சி முகாம் இன்று (11.05.2013) தொடங்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் (20.05.2013) நடைபெறுகின்றது.

மாநில தலைமை மூலம் வரவழைக்கப்பட்டுள்ள அழைப்பாளர் சகோ.M.சாகித்( செங்கை)  அவர்கள் பயிற்சியினை வழங்கிறார்கள்.

இந்த பயிற்சி முகாமில் இஸ்லாமிய அடிப்படை, தொழுகை பயிற்சி, துஆக்கள் மனனம் மற்றும் பேச்சி பயிற்சி ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றது.

58- மாணவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.

இன்ஷாஅல்லாஹ் பயிற்சி முடிந்து சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.







இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை


சிதம்பரம்;.10.05.13 அன்று சகோ ;ராஜ் முஹம்மது அவர்கள்   'நன்மைய ஏவி தீமை தடுப்போம் ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

Monday, May 6, 2013

மாற்று மத சகோதரருக்கு திரு குரான் அன்பளிப்பு




சிதம்பரம்;04.05.13 அன்று கோவிந்தராஜ் என்ற சகோதரர்  நமது மார்கஸ்க்கு வருகை தந்தார்கள் அவருக்கு சகோ;பதுருஜமான் அவர்கள் இஸ்லாம் என்றால் என்ன? என்று விளக்கி திருக்குரான் தமிழ் வழங்கப்பட்டதுஅவருக்கு நேர் வழி கிடைக்க து ஆ,செய்யுங்கள்.

கேபிள் டிவியில் இதுதான் இஸ்லாம் -சிதம்பரம்


                                                       05.05.13 அன்று 
                            மனிதகுலத்திற்கு இஸ்லாம் வழங்கிய நன்மைகள் 
                             நன்மைய ஏவி தீமை தடுப்போம்
                                                        சகோ;P.J அவர்கள் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக ஒவ்வொரு வாரமும்  ஞாயிற்றுக் கிழமை காலை 10.மணி முதல் 11 மணி வரை உள்ளூர் கேபிள்  டிவியில்  இதுதான் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செயபடுகிறது.தொடர்ந்து ஒலிபரப்பாக துவா செய்யுங்கள் -அல்ஹம்துலில்லாஹ்

வாராந்திர பயான்-சிதம்பரம்


சிதம்பரம்;.05.05.13 அன்று மகரிப்பிற்குபிறகு சிதம்பரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ;ஷாபி அவர்கள் ;அல்லாஹ்வின் வல்லமை  என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்..பெண்களும்,மற்றும்ஆண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

கேபிள் டிவியில் இதுதான் இஸ்லாம் -சிதம்பரம்


                                       28.04.13 அன்று 
             இஸ்லாமிய சட்டமே தீர்வு 
                                        சகோ;யூசுப் அவர்கள் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக ஒவ்வொரு வாரமும்  ஞாயிற்றுக் கிழமை காலை 10.மணி முதல் 11 மணி வரை உள்ளூர் கேபிள்  டிவியில்  இதுதான் இஸ்லாம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செயபடுகிறது.தொடர்ந்து ஒலிபரப்பாக துவா செய்யுங்கள் -அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான்- பூதகேணி

சிதம்பரம்;04.05.13 அன்று இரவு  07.00 மணியளவில் பூதகேணியில்    உள்ள ஒரு சகோதரர் வீட்டில் 'பிரார்த்தனை' என்ற தலைப்பில் சகோ;ஆலிமா சபீனா அவர்கள் மற்றும் .சகோ;பதுருஜமான்அவர்கள் ;பொறுமை'  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமான பெண்கள் ,கலந்து பயன் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்


Friday, May 3, 2013

தனிநபர் தஃவா


சிதம்பரம்; 03.05.13 அன்று சிதம்பரத்தை சேர்ந்த செல்வம் என்ற சலீம்  என்ற சகோதரர்க்கு   யாசின் பெண்ணாடம்.அவர்கள்  கடவுள் என்பவன் யார்? என்று மற்றும் இஸ்லாம் சம்பந்தமாக கேள்விகளுக்கு   விளக்கம் அளித்தார்கள் ,
                                   அல்ஹம்துலில்லாஹ்!
                                         

கண் கண்ணாடி -உதவி


சிதம்பரம்;.02.05.13 அன்று பள்ளி படை  சார்ந்த செய்யது காசிம்  அவர்களுக்கு    சிதம்பரம் கிளை சார்பாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது  .அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வார ஜும்மா-சிதம்பரம் கிளை


சிதம்பரம்;.03.05.13 அன்று யாசின் பெண்ணாடம்  அவர்கள்   'பலனுள்ள கல்வி ' என்ற தலைப்பில் ஜும்மா உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.