Saturday, December 31, 2011

ஜனவரி 4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!



கடலூர்: தானே புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 4-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மீட்பு பணிகளை செய்வதற்கு வசதியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. நன்றி;பரங்கிப்பேட்டை TNTJ..

சிதம்பரத்தில் தற்போதைய நிலவரம்!





சிதம்பரத்தில் புரட்டி போட்ட தானே புயலால் கடும் பாதிப்பு ஏற்ப்பட்டது.

அல்லாஹ்வுடைய கிருபையால் தற்போது சிதம்பரத்தில் நல்ல வெயில் அடிகின்றது. அனைத்து செல்போன் டவர்களும் சரிசெய்யப்பட்டு  அலைபேசிகள் அனைத்தும்  செயல்பட தொடங்கியுள்ளது.  கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. மின்கம்பங்கள் அதிகளவில் சேதம்யடைந்துள்ளதால் குறைந்தது மின்சாரம் வழங்க இரண்டு நாட்கள் ஆகும் என்று என்று தெரியவருகின்றது. இருப்பினும் மின்சார துறையினரும் மின்னல் வேகத்தில் களபணியாற்றி வருகின்றனர்.தற்சமயம் சிதம்பரத்தில் முக்கியபகுதியான நன்கு வீதிகளில் மாட்டும் மின்சாரம் வழங்கி இருக்கிறார்கள்.  விரைவில் மின்சாரம் மற்ற பகுதிகளுக்கு  வழங்குவோம் என்று சொல்லியிருகிறார்கள்.

இன்ஷாஅல்லாஹ் விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து இயல்பு நிலையை அடைய துஆ செயுங்கள்..      

Friday, December 30, 2011

சிதம்பரத்தில் "தானே' புயல்"

                                                    சிதம்பரம் மேல வீதியில்
               சிதம்பரம் கஞ்சி தொட்டியில் 
                                                    சிதம்பரம் கீழவீதி

                             மேலவீதி

"தானே' புயல் காரணமாக, சிதம்பரத்தில் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஆனால், கடலூர்  மற்றும் புறநகர்ப் பகுதியில் பலத்த காற்றை தொடர்ந்து நள்ளிரவு முதல் மழை, விட்டு விட்டு பெய்யத் துவங்கியது., மற்றும் மின்சாரம் இரவு முதல்  துண்டிக்கப்பட்டது. 

"தானே' புயல்"







சென்னை: வங்க கடலோரத்தில் மையம் கொண்டுள்ள "தானே' புயல் இன்று காலையில் கரையை கடந்தது. கடலூர் மற்றும் புதுச்சேரி அருகே கரையை கடந்த போது கடும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்ட பகுதி மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். புயல் தாக்கும் என்ற பகுதியில் வாழும் மக்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கும் என அஞ்சப்படுகிறது. தேச விவரம் குறித்து முழு விவரம் இன்னும் அறியப்படாமல் உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள குறைவழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில், சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 107.526 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருக்கும், "தானே' புயல், படிப்படியாக நகர்ந்து, இன்று காலை, புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ., சூறைக்காற்றுடன் இன்று பலத்த மழை பெய்யும். கரையை கடக்கும் பகுதியில், மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே,

456.989 கடல் மைல் தூரத்தில், "தானே' புயலாக உருவெடுத்தது. இதன் காரணமாக, கடந்த நான்கு நாட்களாக கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது.புயல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஆனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பலத்த காற்றை தொடர்ந்து நள்ளிரவு முதல் மழை, விட்டு விட்டு பெய்யத் துவங்கியது.நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என, முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது புதுச்சேரி அருகே இன்று காலை கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் புதுச்சேரி மற்றும் கடலூர், சென்னை நாகை , உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை யொட்டிய பகுதிகளில் குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் காற்றில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. புயல் தாக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடல் கொந்தளிப்பு மட்டும் இருந்தது. பெருத்த சேதம் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும்இல்லை. மழை மட்டும் தொடர்ந்து பெய்து வருகிறது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் ஒருவர் பலி: விழுப்பரம் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது; கடுமையான காற்றும் வீசி வருகிறது. சங்கராபுரத்தில் மரம் விழுந்து ஒருவர் பலியானார். வானூர்- மரக்காணம் பகுதியில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் சிலர் காயம் அடைந்தனர். இந்த பகுதியில் அதிகாரிகள் முகாம் இட்டுள்ளனர். கடும் காற்று காரணமாக மரங்கள், மொபைல் கோபுரங்கள் விழுந்து, கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 நன்றி ;தினமலர்.

Thursday, December 29, 2011

புத்தாண்டு!!! 2012



கால சக்கரத்தை சூழலச் செய்யும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்:
இரவையும் பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவில் சான்றை ஒளியிளக்க செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.  [அல்குர்ஆன் 17:12]
புத்தாண்டு பிறக்கப் போகிறது. பல சாதனைகளையும் செய்து புததாண்டை அடையப்போகும் மகிழ்ச்சியில் தடபுடல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இனி நடைபெறும். புது வருடத்தை அடைந்ததற்காக பூரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வண்ணமாக பல கருத்துள்ள (?) எஸ்எம்எஸ்கள் மெயில்கள் பரிமாறப்படும். தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாகவும அன்பு வெளிப்படும்.
இந்த விழாக்கோலம் நம் சகோதரர்களையும் விட்டபாடில்லை.
இஸ்லாமிய வருட பிறப்பானாலும், ஆங்கில வருட பிறப்பானாலும் அல்லது பிறந்த நாளானாலும் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சிந்தித்து பார்த்தால் அதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
உலகத்தில் ஏதாவது சாதனை செய்தோ அல்லது கஷ்டப் பட்டு எதையாவது அடைந்தாலோ அதில் கொண்டாடுவதற்கு அர்த்தம் உள்ளது. முஸ்லிம்கள் கொண்டாடக்கூடிய இரு பெருநாட்களும் இவ்விதத்திலேயே அமைந்துள்ளன. ஒரு மாதம் இறைவனுக்காக தன்னுடைய பசியையும் தாகத்தையும் இச்சைகளையும் துறந்து இறையச்சம் என்ற உன்னதத்தை அடைந்தோம் என்பதற்காகத்தான் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.
எல்லா தியாகங்களையும் செய்து தன்னுடைய வாழ்விலே மனித குலத்திற்கு  முன்னுதாரணமாக உள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாகவும் நாமும் இறைவனுக்காக எவ்வித தியாகத்தையும் செய்யத்தயார் என வெளிகாட்டும் விதமாக இறைவன் சொன்ன வழியிலேயே அறுத்து பலியிட்டு ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. 
புத்தாண்டை அடைவதற்கு நம்முடைய உயிரை நம்முடைய கையிலா பிடித்து வைத்திருந்தோம் கொண்டாடுவதற்கு? புத்தாண்டு மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் வல்ல இறைவன் கொடுக்கும் வரம் அதை பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அதை கொண்டாடுவதில் எவ்வித அர்த்தமுமில்லை.
ஒரு தினம் கொண்டாடப்படுவதற்கு அறிவுப்பூர்வமான காரணங்கள் ஏதும் அடிப்படையாக இருக்குமேயானால் அதில் மனித சமுதாயத்திற்கு பலன்கள் கிடைத்திட வாய்ப்புண்டு. வெறும் கூத்து கும்மாளம் போதை ஆட்டங்கள் போன்ற கேளிக்கைகளால் ஒருதினம் அனுஷ்டிக்கப்படுகிறதென்றால் அதனால் பெரும் பயன் எதுவும் உலகிற்கு கிடைத்து விடுவதில்லை. 
புதுவருடத்தை அடைந்து விட்டோம் என்பதாலும் அதில் வரக்கூடிய நாட்கள் சந்தோஷமாகவும் நல்லதாகவும் அமைய வேண்டும் என்பதாலும் அவ்வருடத்தின் முதல் தினத்தை கொண்டாடுவதாக மக்களில் சிலர் கூறுகின்றனர்.
நாட்களும் வருடங்களும் நல்லதாகவும் சந்தோஷமாகவும் அமைய வேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்கான அனுகுமுறை வீண் கேளிக்கை ஆட்டங்கள் என்பது நியாய உணர்வுள்ள யாராலும் ஜீரணிக்க முடியாத விஷயமாக உள்ளது. 
மனித வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கி ஆராய்ந்து பார்த்தால் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டு வந்தன. பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படியெல்லாம் அது பல மாற்றங்களுக்கு உட்பட்டு பலமாதிரியாக மருவி நம்முன் வந்து நிற்கிறது என்பதை அறியலாம்.
கி.மு. 2000ம் ஆண்டில் மெசபடோமியாவினர் இளவேனிற் காலத்தை (மார்ச் 25) புத்தாண்டாகக் கொண்டாடினர். எகிப்தியர்கள் மற்றும் பாரசீகர்களும் அப்படியே கொண்டாடினர். 
கிரேக்கர்கள் குளிர்காலத்தில் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். ஆரம்ப ரோம காலண்மரிலும் மார்ச் ஒன்றாம் தேதி தான் புதவருடம். ஆதில் பத்து மாதங்கள் தான் இருந்தன. மார்ச் தான் முதல் மாதம். செப்டம்பர் 7வதுமாதம், அக்டோபர் 8வது மாதம், நவம்பர் 9, டிசம்பர் 10 என்ற விதத்தில் தான் இருந்தது.
அதன் பிறகு கி.மு 700க்குப் பின் வந்த ரோம இரண்டாம் மன்னன் நுமா பொன்டிலியஸ் என்பவர் தான் ஜனவரியையும், பிப்ரவரியையும் சேர்த்தார். இந்த காலண்டர் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 
பிறகு கி.பி. 46ல் ஜூலியஸ் சீசர் தான் சூரியனை அடிப்படையாகக் கொண்ட காலண்டரை உருவாக்கினார். இவர் தான் ஜானஸ்(துயரௌ) என்ற சூரியக்கடவுளின் பெயரால் ஜனவரியில் கொண்டாட்டத்தை உருவாக்கினார். இந்த ஜானஸ் என்ற கடவுளுக்கு இரண்டு முகங்கள் வைக்கப்பட்டன. 
ஒருமுகத்துக்கு பழைய வருடம் என்றும் மற்றொரு முகத்துக்கு புதிய வருடம் என்றும் பெயரிடப்பட்டிருந்தன. இப்படி புத்தாண்டை அவர்கள் ஒரு வணக்கம் போன்று கொண்டாடியிருந்ததை இவ்வரலாற்றுக் குறிப்பிலிருந்து நாம் அறிய முடிகிறது. ரோமானியர்கள் தங்கள் ஆலுவலகங்களில் ஜனவரி 1ஐ விருந்து கேளிக்கைகளுடன் கொண்டாடியுள்ளனர். பிறகு பழைய வழக்கம் என்ற பெயரில் மக்களைத் திருப்திப் படுத்த மார்ச் மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.
அந்தக் காலகட்டத்தில் கிருஸ்தவ ஐரோப்பாவில் டிசம்பர் 25 இயேசு பிறந்தநாள், மார்ச் 1ம் தேதி யnரெஉயைவழைn னயல அதாவது ஜிப்ரயில் மர்யமிடம் உணர்த்திய நாள், மார்ச் 25ந்தேதி ஈஸ்டர் கொண்டாட்டம் என்ற ரீதியில் அவர்களின் வழிமுறை இருந்திருக்கிறது.
இப்படி மூடநம்பிக்கைகளாலும் இணைவைப்பு என்ற பாவத்தினாலும் அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்தப் புத்தாண்டு கொண்டாடடங்கள்  நமக்குத் தேவையா? நூம் அதை கொண்டாட அனுமதி உள்ளதா?
அதைக் கொண்டாடுவதன் மூலம் மார்க்கத்திற்கல்லவா நாம் மாறு செய்கிறோம்?
ஒரு கொண்டாட்டத்தின் மூலம் எதுவாக இருக்கிறதென்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
இஸ்லாம் கொண்டாடச் சொல்லும் தினங்களை எண்ணப் பார்த்தாயா? அவைகளில் முழுமையான இறைஅழைப்பும் நினைவுகூறும் மகத்தான இரட்சகனுக்குச் செய்யப்படக்கூடிய தியாகப் படிப்பினைகளும் மறுமைக்கு வழிகாட்டலும் அல்லவா நிறைந்துள்ளது. அவற்றில் அல்லவா மனித சமுதாயத்துக்கு பலன் இருக்கிறது. 
இனறைய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மனிதர்களின் மூளைசசலவையாய் இருக்கிறது. மனிதர்களுக்கு பயன்மிக்க வழி காட்டலும் வளமான பின்னனியில்லாமலும் இருக்கிறது. 
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:
இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தா செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வண்ஙகுவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்யுங்கள் (அல்குர்ஆன்: 41:37)
.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் ஒருவர் ஒரு சமூகத்தினரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே!  (அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அஹ்மது 4968)
எனவே நன்மைகளாய் காட்டப்படும் இப்படிப்பட்ட கலாச்சார சூழ்ச்சிகளில் சிக்கி அல்லாஹ் நமக்கு தந்திருக்கும் தனித்தன்மையை இழந்து விடாதவாறு அல்லாஹ்வின் பேரருளை பெற முயற்சிப்போமாக!
நன்றி: துபை TNTJ

Wednesday, December 28, 2011

பூட்டு போடும் போராட்டம்

இறைவழிபாட்டிர்க்கும் பொதுமக்களுக்கும் இடையூராக இருக்கும் சாரயக்கடையைஅப்புறபடுத்த வலியுறுத்தி சிதம்பரம் TNTJ சார்பாக ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டி....

Monday, December 26, 2011

மக்களிடம் மார்க்கத்தை கூற நீங்கள் தயாரா !!

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
மார்க்க பிரசாரகர்களை அதிகப்படுத்துவது சம்பந்தமாக.
.

அன்புள்ள இஸ்லாமிய கொள்கை சகோதரர்களே,
கியாமத் நாள் வரை, இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்களிடம் கொண்டு செல்வது அவசியம் என நம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
அனால், யார் அப்படி கொண்டு செல்வது ? , என்ற கேள்வி வரும்பொழுது, நாம் விலகிக்கொள்கின்றோம். தன் அளவில், தன் வட்டத்தில் இஸ்லாத்தை கூறுபவர்கலாக நம்மில் சிலர் இருந்தாலும், ஒரு கூட்டத்திற்கு முன் பிரசாரம் என்று வந்துவிட்டால் ஒதுங்கிக்கொல்கின்றார்கள். ஆகவே,

இஸ்லாமிய பிரசாரகர்களை அதிகப்படுத்தும் முயற்சியில், ஒரு எளிமையான வழியை TNTJ ஜித்தா மண்டலம் தங்களுக்கு முன்  வைக்கிறது. அதாவது...
"
நீங்கள் பேசி எங்களுக்கு அனுப்புங்கள்" என்பதுதான்.



விளக்கமாக..
1. PJ
அவர்களின் ஆக்கங்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் (வீடியோ, ஆடியோ, புத்தகம், இப்படி எதாவது ..)  -  இது அவசியம் 
2.
ஐந்து நிமிடம் பேசுவதற்குண்டான  குறிப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.
3.
அதை மனதில் நிறுத்துங்கள் 
4.
நின்று கொண்டு, ஐந்து நிமுடம் பேசி, அதை உங்கள் மொபைல் அல்லது  மைக் மூலம் ஆடியோ பதிவு (record) செய்யுங்கள்.
   
இப்படி செய்யும் பொழுது, விரும்பினால் உங்கள் முன்னாள் வீட்டினரையோ அல்லது நண்பர்களையோ உங்களுக்கு முன் இருக்க செய்யலாம்
5.
பின்னர் www.wikisend.com என்ற இடத்தில அதை அனுப்பி, அதில் வரும் லிங்கை குறித்துகொள்ளுங்கள்.
6.
வாரம் ஒருமுறை வெள்ளி கிழமை அன்று, அந்த லிங்கை சகோ. ரபி மற்றும் சகோ.அன்சாரி அவர்களுக்கு அனுப்பிவய்யுங்கள் 

    '
rafimailboxes@gmail.com'     இவரின் மொபைல் எண் 0557968391

    '
chekmohidein@gmail.com   இவரின் மொபைல் எண் 0500047327

7.
தங்களின் முயற்சி சிறக்க அவ்வப்போது தனிப்பட்ட முறையில் கருத்துக்கள் தெரிவிக்கப்படும்.

நம் அனைவரையும் இந்த புனித பணியில் இணைத்துக்கொள்ளவும், அதிகதிகமான சதகதுள் ஜாரியாவை நாம் பெற்றுக்கொள்ளவும் 
அல்லாஹ் அருள் புரியட்டும்

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

Sunday, December 25, 2011

வாராந்திர பயான்






அல்லாஹ்வின் அருளால் 25.12.11(ஞாயிற்றுக்கிழமை) மகரிப்பிற்கு பிறகு நமது பள்ளியில் வாராந்திர பயான் நடைபெற்றது .அதில் இஸ்லாம் ஒரு எளியமர்க்கம். கேள்விகளுக்கு இமாம் ஹனீப் அவர்கள் பதில் அளித்தார்கள.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் ஏமாற்று வேலை

தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
இது குறித்து பி.ஜெய்னுல் ஆபிதீன் தலைவர் ; இந்தியாவில் 20 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர் ,அவர்களுக்கு தற்போது 2.50 சதவீதம் தான் அரசின் கல்வி ,வேலை வாய்ப்பு கிடைக்கிறது .முஸ்லிம்களுக்கு 20  சதவீ த இட ஒதிக்கீடு வேண்டும் மாநில வாரியாக சிறுபான்மையினர் யார்  என்பதில் பல வேறு பாடுகள் உள்ளன .
 இதில் யாருக்கு, எவ்வளவு ஒதிக்கீடு என்று குறிப்பிட்டு கூறாததால், சிறுபான்மையினர் இடையே பிரச்சனையை ஏற்படுத்துவது போல் ,மத்திய அரசின் உத்தரவு உள்ளது ,இந்த இட ஒதிக்கீடு முஸ்லிம்களுக்கு ,தற்போது கிடைக்கும் ,சலுகையும் ,இழக்கும் நிலையை தான் ஏற்படுத்தும்.
தினமலர் ; 25.12.11

 

குடும்பத்துடன் இஸ்லாத்தில் இணைந்த சகோதரர்


Tuesday, December 20, 2011

தமிழக அரசே...! "டாஸ்மார்க் அரசே...!

இறைவழிபாட்டிர்க்கும் பொதுமக்களுக்கும் இடையூராக இருக்கும் சாரயக்கடையைஅப்புறபடுத்த வலியுறுத்தி சிதம்பரம் TNTJ சார்பாக ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டி....

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி???




தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும்,அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது...
அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் :

நல்ல கல்லூரியில் இடம் :

அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் குறைந்த (அரசு நிர்ணயித்த) கட்டணத்தில் எளிதில் இடம் கிடைக்கின்றது. மதிப்பெண் குறையும் போது பல லட்சம் கொடுத்துதான் இடம் (சீட்) வாங்க வேண்டியுள்ளது அல்லது தரம் குறைந்த கல்லூரியில்தான் இடம் கிடைகின்றது. மேலும் அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் மட்டுமே இடம் கிடைக்கும்.

நல்ல தரமான கல்வி :

 நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதால் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நமக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கின்றது. இதன் மூலம் நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) வளர்கின்றது. மேலும் பட்ட படிப்பிலும் அதிக மதிப்பெண் எடுக்க முடிகின்றது. குறைவான மதிப்பெண் எடுத்து தரமற்ற கல்லூரிகளில் சேர்வதினால் பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் ஃபெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது.

வேலை வாய்ப்பு :

 நல்ல கல்வி கிடைக்கும் போது நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities) வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேருவதற்கு ஆங்கில பேச்சாற்றல், (English speaking skill) பிறருடன் கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill) வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம்.

மேலும் படிக்கும் காலத்தில் பிற கல்லூரிகளில் நடக்கும், (நாம் படிக்கும் துறை சார்ந்த) போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும், வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன. இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கான வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும். தரமற்ற கல்லூரிகளில் படிக்கையில் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாக இருக்கும் போது பிற திறன்களை வளர்த்துகொள்ள இயலாமல் போகின்றது.

கல்வி உதவி :

 அதிக மதிப்பெண் எடுத்தால் கல்வி உதவி எளிதில் கிடைக்கின்றது. ஏனெனில் கல்வி உதவி செய்யும் செல்வந்தர்கள் முதலில் பார்ப்பது மதிப்பெண்னைத்தான், பிறகுதான் குடும்ப வறுமையை பார்கின்றார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் வறுமையான குடும்பமாக இருந்தாலும் கல்வி உதவி செய்ய தயங்குகின்றனர். அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு அரசும் பல்வேறு உதவி தொகைகளை வழங்குகின்றது. உதாரணத்திற்க்கு +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ.1000 வழங்குகின்றது.

அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்

நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை

முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம், என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level). இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். என்னால் இது இயலாது, எனக்கு வசதி இல்லை, பெற்றோர்கள் படிப்பறிவில்லாதவர்கள் எனக்கு உதவ யாரும் இல்லை, எனக்கு படிப்பு வராது போன்ற எதிர்மறை சிந்தனைகளை (Negative thoughts) தூக்கிபோடுங்கள். ஒரு காரியம் நம்மால் இயலாது என நினைக்கலாம், ஆனால் நம்மை படைத்த இறைவனால் அது இயலும். இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

உறுதியான நம்பிக்கை இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், நிச்சயம் அல்லாஹ்வின் உதவியோடு அதை உங்களால் சாதிக்க முடியும், நமக்கு பண வசதி இல்லாமல் இருக்கலாம், நம் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம் இப்படி என்ன தடை இருந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெரிந்து நமக்கு உதவி செய்ய அல்லாஹ் இருகின்றான்.

"(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்". (அல் குர் ஆன் : 33:3 ).

நமக்கு உதாவாமல் போவதற்க்கு அல்லாஹ் இயலாதவனோ, இரக்கம் இல்லாதவனோ இல்லை. உங்களுக்கு உதவ அல்லாஹ்விடம் செல்வமும் உண்டு, பேரறிவும் உண்டு, கொடுக்கக்கூடிய கருனையும் உண்டு. அல்லாஹ்விடம் கேளுங்கள் அல்லாஹ் நிச்சயம் உங்கள் கனவை நினைவக்குவான் .

".....நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது". (அல் குர் ஆன் : 30: 47 ).

நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்பதற்க்கு ஒரு வழியும் இல்லையே என கவலை பட வேண்டம்,நமக்கு அல்லாஹ் இருக்கின்றான் வழிகாட்டுவதற்க்கு.

"அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்". (அல் குர் ஆன் : 26 : 62).

ஆர்வம்

எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “இந்த பாடம் கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது,” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, சில பாடங்கள் ஒரு முறை படித்தால் புரியும், சில பாடங்கள் பல முறை படித்தால் புரியும். நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படித்தால் எல்லா கடினமான பாடங்களும் எளிதாகிவிடும். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

மறதி :

மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது, இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது மனதில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.

மறதியை போக்க :

கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள். ஆர்வமாக படித்தால் எதுவும் மறக்காது

நாம் நமக்காக படிக்கின்றோம் :

நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான், என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும். (இன்ஷா அல்லாஹ்)

சினிமா பாட்டு கேட்க்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை வளர்த்துகொள்ள பயன்படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர். இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)

கடின உழைப்பு

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டோம்,இனிமேல் படிக்க வேண்டாம் எல்லம் தானாக நடந்துவிடும் என்று படிக்காமல் இருக்கக் கூடாது. அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்துவிட்டு கவனத்துடனும் படிக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.


"நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்." (அல் குர் ஆன் : 29: 69).

1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.

2. எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும், எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.

3. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் : படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.

4. குறிபிட்ட பாடத்திற்க்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது : பொறியியல் சேர்வதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதே போல் மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும். எனவே குறிபிட்ட பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

தேர்வு எழுதும் முன்

தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம்

1. படிக்கும் முறை : பொதுவாக நாம் தேர்விற்க்காக படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

2. திட்டமிடுதல் : எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும். இதில் நாம் 10 மணி நேரம் படிபதற்க்காக செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள 2 மணி நேரத்தில் படித்ததை மீண்டும் நினைவில் நிறுத்த (Revise பன்ன) பயன்படுத்த வேண்டும். அதே போல் நாம் படிக்கும் ஒவ்வொறு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிறுத்த (Revise பன்ன) பயன்படுத்த வேண்டும்.

3. சுயபரிசோதனை (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுயபரிசோதனை செய்ய (Check - பன்ன) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம், இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.

4. தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும் போதே படிப்பதை நிருத்திகொள்ள வேன்டும், புதிதாக எதையும் படிக்காமல் இது வரை படித்ததை நினைவில் நிறுத்த (revise பன்ன) வேண்டும். எனவே நாம் திட்டமிடும் போது (Time table- போடும் போது) தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரத்திற்க்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்து விடும் படியாக திட்டமிட வேண்டும்.

5. பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும், எதாவது பாடம் கடினமாக இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக!
- (அல்-குர் ஆன் 20 : 114)
நன்றி: TNTJ STUDENT WING

'கிரி்கெட் பைத்தியம்’ உங்களுக்கும் இருக்கிறதா?

'கிரி்கெட் பைத்தியம்’ 




நம் நாட்டில் வாழும் பெரும்பாலான மனிதர்களிடம் தனியான ஓர் இடத்தை பிடித்திருக்கும் விளையாட்டு கிரி்கெட்.அதற்குக் காரணம், நம் நாடு இவ்விளையாட்டில் உலக அளவில் கொடி கட்டிப் பறப்பது தான் என்று கூறினால், அது மிகையாகாது.ஒரு விளையாட்டை இரசிப்பது, அதற்காக நேரம் ஒதுக்குவது தவறு கிடையாது. ஆனால், அதற்கு அடிமையாகுவது தான் மகாத் தவறு. கிரிக்கட்டிற்கு அடிமையானவர்கள் வெளிப்படுத்தும் உணர்வு ‘கிரி்கெட் பைத்தியம்’  என வர்ணிக்கப்படுகிறது. இந்த ‘கிரிக்கெட் பைத்தியம்’ நமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது தான் வேதனைக்குரிய விடயம். கிரிக்கட் போட்டிகள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் இவர்கள் தமது உலக, மறுமை கடமைகளை மறந்து விடுகிறார்கள்.



ஆண், பெண் இரு பாலாரும் உலக ரீதியாக செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம். தொழில் புரிவது, சமூக சேவைகளில் அதிகம் ஈடுபடுவது, வாக்குகளை நிறைவேற்றுவது போன்றவை ஆண்களுடன் சம்பந்தப்பட்ட கடமைகள். சமையல், பிள்ளை வளர்ப்பு, கணவனை கவனிப்பது, பெற்றோரை அதிகம் கவனிப்பது போன்றவை பெண்களுடன் சம்பந்தப்பட்ட கடமைகள். இது போக உரிய நேரத்தில் தொழுவது, குர்ஆன் ஓதுவது, தஃவா பணியில் ஈடுபடுவது, உபதேசங்களை செவிமடுப்பது, அத்கார்களை மனனமிடுவது போன்றவை மறுமை ரீதியான கடமைகள்.இவை அனைத்தையும் உதாசீனம் செய்கின்ற மனோ நிலையை இந்த ‘கிரிக்கெட் பைத்தியம்’ உருவாக்குகிறது.



சகோதரர்களே! கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது பெரும்பாலான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் மெய் மறந்தவர்களாக அவற்றை கண்டு கழிக்கின்றனர். முஸ்லிம்களாகிய நாம் மறுமை இன்பத்திற்கு முதலிடம் கொடுக்கிறோமா? அல்லது உலக இன்பத்திற்கு முதலிடம் கொடுக்கிறோமா? என்பதை ஒரு கணம் எம்மை நாங்களே பரிசோதனை செய்து பார்ப்பதற்கு கிரிக்கட் நடைபெறும் சந்தர்ப்பங்கள் ஒரு நல்ல தருணம்.

நாம் கிரிக்கெட் போட்டிகளை ரசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளிவாசலிலிருந்து ‘ஹய்யஅலஸ்ஸலா (தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்)’ , ‘ஹய்யஅலல் பகலாஹ் (வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்)’ என்று ஒரு பகிரங்க அழைப்பு விடுக்கப்படுகிறது. 

இச்சந்தர்ப்பத்தில் நமது உள்ளங்கள் இவ்வழைப்பை ஏற்க உடன்கடுகின்றதா? அல்லது மறுக்கின்றதா?

கிரிக்கட் பிரியர்களாக உள்ள நமது உள்ளங்கள் இப்படித் தடுமாறுகின்றது.

  • “இந்த ஓவர் முடியட்டும்”
  • “இவன்ட சென்சரிக்குப் பிறகு போவோம்”
  • “மெச் முடிகின்ற கட்டம், முடிந்த பிறகு போவோம்”
  • “பவர் பிளே முடிந்த பிறகு தொழுவோம்”
  • “அடுத்த தொழுகை வரை நேரம் இருக்குது தானே. அதற்குள் தொழுது கொள்வோம்”

இப்படிப் பல ஊசலாட்டங்கள். 

இதிலிருந்து எப்படியோ தப்பி தொழுகைக்காக பள்ளிக்கு சென்று விட்டால் தொழுது கொண்டிருக்கும் போதே இன்னும் சில ஊசலாட்டங்கள். 

  • “அவசரமாகத் தொழுது விட்டு உடனே வீட்டுக்குச் செல்ல வேண்டும்”
  • “அவன் அவுட் ஆகி விட்டானோ தெரியாது”
  • “அவன்ட சென்சரிய பார்க்கனும்”
  • “முதல் இன்னிங்ஸ் முடிகின்ற கட்டத்தில் வந்தேன். எவ்வளவு ரன்ஸ் அடித்தார்களோ தெரியாது”

இப்படியே தொழுகை முடிந்து விடும்.பிறகு துஆ, சுன்னத் ஒன்றுமே இல்லாமல் உடனே ஓடி விடுகின்றோம்.உண்மையிலேயே இவ்வாறான ஒரு நிலை எமக்கும் இருக்குமென்றால் நிச்சயமாக “கிரிக்கட் பைத்தியம்” எமக்கும் பிடித்து விட்டது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

குறித்த ஓர் அணியின் மீது அளாதியான பற்று வைத்து அவ்வணி மட்டும் தான் வெற்றி பெற வேண்டுமென வெறி பிடித்து அலைவது ‘கிரிக்கட் பைத்தியத்தின’ இன்னொரு வெளிப்பாடாகும்.இவர்கள் குறிப்பிட்ட அவ்வணி வெற்றி பெற்று விட்டால் ஊர் முழுக்க பட்டாசு கொழுத்தி அந்நாளை கொண்டாடுகின்றனர். அதே நேரம், தோற்றுப் போய் விட்டால் அவ்வணி வீரர்களின் வீடுகளை உடைக்கின்றனர். வாகனங்களை சேதமாக்குகின்றனர். இவை இஸ்லாம் அங்கீகரிக்கும் நடைமுறைகளா?

ஷைத்தான் நம்மிடம் இந்தப் ‘பைத்தியத்தைத்’ தான் எதிர்ப்பார்க்கிறான். அவனது எதிர்ப்பார்ப்பை நாம் விரும்பியோ விரும்பாமலோ நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். 

அவன் கூறிய ஒரு செய்தியை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

“என் இறைவனே! நீ என் வழியைத் தடுத்துக் கொண்டதன் காரணமாக பூமியிலுள்ள (இன்பங்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்” (சூரா அல் ஹிஜ்ர் 15: 39)

சகோதரர்களே! ஒரு மனிதன் ஒரு தவறிலிருந்து தன்னைத் திருத்திக் கொள்ள ஒரேயொரு நல்ல வார்த்தை போதும்.பனூ இஸ்ரவேலர்களுடைய காலத்தில் வாழ்ந்த ஒரு பெண் கூறிய “அல்லாஹ்வை பயந்து கொள்” என்ற வார்த்தை அவளுடன் விபச்சாரம் புரியத் தயாரான இளைஞனைத் அவ்வீனச் செயலை விட்டும் தடுத்தது.

அதே போன்று, உண்மை முஸ்லிம்களாக திகழ விரும்புகின்ற நாம் ‘கிரிக்கட் பைத்தியத்திலிருந்து’ நம்மைத் திருத்திக் கொள்ள விரும்பினால் அல்லாஹ் பல வார்த்தைகளைக் கூறுகிறான். அவை நம்மைத் திருத்தக் கூடும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وللآخرة خير لك من الأولى
“உமக்கு உலகத்தை விட மறுமை மிகச் சிறந்தது”. (சூரா அல்லுஹா 93: 4)

கிரிககெட் மூலம் அற்ப உலக இன்பம் கிடைக்கிறது. தொழுகை மூலம் நிரந்தர மறுமை இன்பம் கிடைக்கிறது. உலக இன்பத்தை விட மறுமை இன்பம் தான் சிறந்தது என்பதை நம் உள்ளங்கள் உணர்ந்தால் தொழுகைக்கு முன் கிரிக்கட் தூசியாகி விடும்.

மேலும் அல்லாஹ் விசுவாசிகளைப் பார்த்துக் கேட்கிறான். 

“ விசுவாசிகளே! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்கு கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணம் என்ன? மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமைக்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை மிகவும் அற்பமானதே” (சூரா அத் தவ்பா 9: 38)

மேலும் விசுவாசிகளின் உயர்ந்த பண்புகளை அல்லாஹ் இப்படி வர்ணிக்கிறான்.

“அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள்” (அல் முஃமினூன் 23: 3) 

இப்படி உலக இன்பத்தை விட மறுமை இன்பம் தான் சிறந்தது என்பதைக் குறிக்கும் வஹியின் வார்த்தைகள் ஏராளம் ஏராளம்.

எனவே, வஹியின் இவ்வழிகாட்டுதலை ஏற்று நம் உள்ளங்களை மாற்றி ‘கிரிக்கெட் பைத்தியத்தை’ விட்டும் முழுமையாக நீங்கி மறுமை இன்பத்திற்கு முதலிடம் கொடுத்து தொழுகையின் பக்கமும் நன்மையான அனைத்து காரியங்களின் பக்கமும் விரைந்து செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!
நன்றி;tntj