Saturday, December 31, 2011

சிதம்பரத்தில் தற்போதைய நிலவரம்!





சிதம்பரத்தில் புரட்டி போட்ட தானே புயலால் கடும் பாதிப்பு ஏற்ப்பட்டது.

அல்லாஹ்வுடைய கிருபையால் தற்போது சிதம்பரத்தில் நல்ல வெயில் அடிகின்றது. அனைத்து செல்போன் டவர்களும் சரிசெய்யப்பட்டு  அலைபேசிகள் அனைத்தும்  செயல்பட தொடங்கியுள்ளது.  கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. மின்கம்பங்கள் அதிகளவில் சேதம்யடைந்துள்ளதால் குறைந்தது மின்சாரம் வழங்க இரண்டு நாட்கள் ஆகும் என்று என்று தெரியவருகின்றது. இருப்பினும் மின்சார துறையினரும் மின்னல் வேகத்தில் களபணியாற்றி வருகின்றனர்.தற்சமயம் சிதம்பரத்தில் முக்கியபகுதியான நன்கு வீதிகளில் மாட்டும் மின்சாரம் வழங்கி இருக்கிறார்கள்.  விரைவில் மின்சாரம் மற்ற பகுதிகளுக்கு  வழங்குவோம் என்று சொல்லியிருகிறார்கள்.

இன்ஷாஅல்லாஹ் விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து இயல்பு நிலையை அடைய துஆ செயுங்கள்..      

No comments:

Post a Comment