Thursday, January 19, 2012

சுழற்சி முறையில் மின்தடை அறிவிப்பு


சிதம்பரம் சிதம்பரம் பகுதியில் வெள்ளிக்கிழமை முதல் 5 நாள்களுக்கு சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ச.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிதம்பரம் பகுதியில் அதிகரித்து வரும் மின்தேவையை ஈடு செய்யும் பொருட்டு துணை மின் நிலையத்தில் உள்ள 10 எம்.வி.ஏ. திறன் மின்மாற்றியின் திறனை உயர்த்தி புதிய 16 எம்.வி.ஏ. திறன் உள்ள மின்மாற்றியை அமைக்கும் பணி வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளது.
எனவே சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, மாரியப்பா நகர், வண்டிகேட், சி.முட்லூர், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலை நகர், மணலூர், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், கிள்ளை, பின்னத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களுக்கு மாலை நேரங்களில் சுழற்சி முறையில் தினமும் ஒரு மணி நேரம் மின்தடை செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
post; பத்திரிக்கை செயதி

No comments:

Post a Comment