Tuesday, January 3, 2012

பூட்டு போடும் போராட்டம் தற்காலிமாக வாபஸ்









சிதம்பரம் TNTJ மார்கஸ் மிக அருகில் உள்ள NO;2406 அரசு டாஸ்மார்க் கடை பொது மக்களுக்கும், வணக்க வழி பாட்டிற்கும், மாணவ, மாணவியர்களுக்கும் மிகவும் இடையுறாக இருந்து வருகிறது. 
அது அருகிலேயே பாருடன் NO;2407 அரசு மது கடை கொண்டு வர முயற்ச்சி நடந்தது.
         இந்த பெரும் அநீதியை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர் ,கோட்டாசியர் ,தாசில்தார், SP ...அனைவர்க்கும் மனு வழங்கப்பட்டது. அதில் காலதாமதம் ஏற்படும் நிலை இருந்தவுடன்,டாஸ்மார்க் கடைக்கு,பூட்டு போடும் போராட்டம் எதிர் வரும் 06..01.12 வெள்ளிகிழமை ஜும்மாவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டு, நகர முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.
          03.01.12.அன்று காலை 11.30 மணிக்கு சிதம்பரம் நகர நிலையத்தில் காவல் துறை ஆய்வாளர் சதீஸ்,அவர்களும்,  கலால் தாசில்தார் ரங்கராஜன் அவர்கள் முன்னிலையில் நமது ஜமாத் நிர்வாகிகள் AK  தாஜிதீன், S. சேக் முஹம்மது ,A.இப்ராகிம் MM.ஹனீப் ஆகியோர் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு NO;2407 டாஸ்மார்க் கடை அந்த இடத்திற்கு வரவே வராது எனவும், இருக்கும் டாஸ்மார்க் கடையை 1மாத அவகாசத்தில் காலி செய்து தருவதாகவும் வாக்குறுதியாகவும், எழுதி வாங்கப்பட்டது.

அல்ஹம்துலிலாஹ்;.இதனால் இன்ஷா அல்லாஹ் மிக பிரம்மாண்டமான முறையில் நடக்க இருந்த பூட்டு போடும் போராட்டம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்டது.







No comments:

Post a Comment