Thursday, January 12, 2012

தானே' புயலுக்கு நிவாரண உதவி

 ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய தனியார்  ஊழியர்கள்.    
                                கடலூர் மாவட்டத்தையே புரட்டி போட்ட தானே' புயலால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக சிதம்பரத்தில் உள்ள ஒரு கடை யில் வேலை செய்யும்  ஊழியர்கள்.     தமது ஒரு நாள் சம்பளத்தை மொத்தமாக வசூலித்து  RS,15800.00 வழங்கியுள்ளார்கள் 'அல்ஹம்துலில்லா" 
               கிளை தலைவர்;  S.சேக் முஹம்மது வசம்  RS;15800/  ஒப்படைக்கப்பட்டது.

       நன்மையிலும் இறையச்சததிலும்  ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்     அல் குர் ஆன் ; 5-2    

                "எவரொருவர்  ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப்போலாவார்”  (அல் குர்ஆன் 5:32)                                                                             
          

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதற்கட்டமாக அறிவித்து  பத்து லட்சம் ரூபாய் நிதி அவர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டது .அது  முதலுதவி நிதியாகுமே தவிர இது அவர்களின் துயரத்தைப் போக்கிவிடாது. இவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் மீதுமே இருக்கின்றது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்னமும் அதிகமான நிவாரணத்தை வழங்குவதற்கு வாக்களித்துள்ளது. இது இறைவனின் கிருபையால் நீங்கள் கரம் கொடுக்காமல் சாத்தியமாகாது.

No comments:

Post a Comment