Tuesday, January 10, 2012

ஜமா அத் மூலம் மரங்கள் அகற்றம்

கிள்ளை : சிதம்பரம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்களை பின்னத்தூர் ஜமா அத்தினர் வெட்டி அப்புறப்படுத்தினர். "தானே' புயலால் அதிகளவில் மரங்கள் சாலையில் விழுந்ததால் கிராமங்களிலிருந்து நகரத்திற்குச் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. சிதம்பரத்தில் இருந்து மேலச்சாவடி வழியாக கிள்ளை செல்லும் சாலை, பின்னத்தூர் சாலையில் பெரிய புளியமரம் விழுந்தது. சம்மந்தப்பட்டவர் கள் கண்டு கொள்ளாததால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். பின்னத்தூர் ஜமா அத் நிர்வாகத்தினர் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. (09.01.12)

No comments:

Post a Comment