Sunday, January 8, 2012

உங்களுக்கு தெரியுமா ?

இந்தியாவின் முதல் பள்ளிவாயில்!

india-firstmasjid கேரள மாநிலத்திலுள்ள கொடுங்கலூர் என்ற ஊரில் அமைந்துள்ள பள்ளிவாயில் தான் இந்தியாவின் முதல் பள்ளிவாயில் என்று கூறப்படுகின்றது. கி.பி. ஆம் 621 ஆண்டு சேரமான் பெருமாள் என்ற மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த மஸ்ஜித் 1375 ஆண்டு காலமாக இருந்து வருகின்றது.
இறுதி இறைத்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களின் ஒன்றான சந்திரன் பிளவுபடுதல் நிகழ்ச்சியைக் கண்ணுற்று அதன் மூலம் இஸ்லாத்தை தழுவியதாக கூறப்படும் சேரமான் கட்டிய இந்த பள்ளிவாயிலை ரூபாய் பத்து கோடி செலவில் விரிவுபடுத்தப் போவதாக செய்திகள் கூறுகின்றது.

No comments:

Post a Comment