Thursday, January 26, 2012

சர்வதேச இலக்கிய விழாவா ? சல்மான் ருஷ்டிக்கு விளம்பர விழாவா ?

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

சர்வதேச இலக்கிய விழாவா ? சல்மான் ருஷ்டிக்கு விளம்பர விழாவா ?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய விழாவில் பெண் பித்தனும்> சர்வதேச எழுத்து விபச்சாரனுமாகிய சல்மான் ருஷ்டி வந்து கலந்து கொள்ள முடியாததற்கு கொலை மிரட்டல் என்ற கரடியை அவிழ்த்து விட்டதை நம்பிய அவரைப் போன்ற ஹரி குன்ஸூரு> அமிதவ் குமார் என்ற எழுத்து வியாபாரிகள் சாத்தான் ருஷ்டி ஏற்கனவே உளறிய சாத்தானின் கவிதைகளில் சில வரிகளை அவருக்கு பதிலாக விழா ஒருங்கிணைப்பாளர் தடுத்தும் தடையை மீறி விழாமேடையில் வாசித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட சிமி போன்ற அமைப்புகள் அல்லது மும்பை நிழல் உலக தாதாக்கள் தன்னை கொலை செய்;யக்கூடும் என்று உளவுத் துறை முன்கூட்டியே தகவல் கொடுத்திருந்தக் காரணத்தால் தான் தன்னால் வந்து கலந்து கொள்ள முடியவில்லை என்று விழாவைப் புறக்கனித்தற்கான காரணத்தை சாத்தான் ருஷ்டி கூறி உள்ளார். 

ஆனால் இவரை விட இஸ்லாத்தை கீழ்தரமான நடையில் எழுதியதுடன் பெண்ணினத்தை அழிவிற்கு இழுத்துச் செல்லும் நச்சுக் கருத்துக்களை இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் பரப்பிய இஸ்லாமியப் பெயர் தாங்;கிய தஸ்லீமா நஸ்ரீன் 1994ல் வங்க தேசத்திலிருந்து விரட்டப்பட்டப் பின் உலகின் பல நாடுகளில் தங்கிவிட்டு இறுதியாக இந்தியாவுக்கு குடியேறுவதாக அறிவித்ததும் இப்பொழுது பத்திரிகைகள் இவருக்கு கிளப்பி விட்ட பீதியை விட அப்பொழுது அவருக்கும் பீதியைக் கிளப்பி விட்டன. ஆனால் அந்த அச்சுருத்தலை பொருட்படுத்தாமல் அவர் இந்தியாவுக்குள் வந்தார்.

ஒருப் பெண்ணுக்கு இருந்த துணிச்சல் கூட இந்த ஆண் தொடை நடுங்கிக்கு இருக்கவில்லை என்பது எழுத்து வியாபாரிகளுக்கு மத்தியில் மிகப் பெரிய ஒரு இழுக்காகும். இந்த பேடித் தனத்தைத் தான் மேல்படி விழாவில் அவர்கள் பேசி இருக்க வேண்டும்.

உயிரை துச்சமெனக் கருதி சர்வதேச இலக்கிய விழாவிற்கு வருகை தர மறுத்த இவரது பேடித் தனத்தை பேசுவதை விட்டு பொய்களைப் புணைந்து சாத்தானின் கவிதைகள் எனும் பெயரில் அவர் ஏற்கனவே எடுத்த வாந்தியை ஹரி குன்ஸூரு> அமிதவ் குமார் விழுங்கி விழா மேடையில் உமிழ்ந்துள்ளனர்;. 

விளம்பரமே பிரதான நோக்கம்.
சாத்தான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகளுக்குப் பிறகு அவர் எழுதிய பிற நூல்கள் அவ்வளவாக உலகச் சந்தையில் விலை போக வில்லை அதனால் மீண்டும் தன்னுடையப் புத்தகங்கள் விலை போக வேண்டும் என்பதற்காக ஜெய்ப்பூர் இலக்கிய விழா மேடையை ஹரி குன்ஸூரு> அமிதவ் குமாரைக் கொண்டு விளம்பர மேடையாக மாற்றி உள்ளார்.

விழா முடிந்தப் பின் எனக்கு எந்த கொலை மிரட்டலும் இல்லை உளவுத்துறை கூறியதாக வேண்டுமென்றே என்னை ராஜஸ்தான் அரசு பொய் சொல்லித் தடுத்து விட்டது என்று விளம்பரத்துக்காக அடுத்த அந்தர் பல்டி  அடித்தார். 

விளம்பரத்துக்காக இவர் அடித்த அந்தர் பல்டி ஆகாச பல்டியைப் பார்த்த ராஜஸ்தான் அரசு இறதியாக இவருக்கு வீடியோ கான்ஃபரன்சிங்கில் பேசக் கொடுத்த சான்ஸையும் ரத்துப் பண்ணி விட்டது.  

அவரது அடுத்தப் புத்தகம் யூத, கிறுத்தவ சந்தையில் விற்பனை சூடு பிடிக்க வேண்டும் என்பதற்காக அவரது ட்விட்டரில் மேல்படி அவரது இரு விளம்பர தாரரையும் ஆஹா! ஓஹோ! என்றுப் புகழ்ந்துத் தள்ளியதுடன் நில்லாமல் என்னை எதிர்த்து மதப் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம்களுக்குத் துணிவிருந்தால் இஸ்ரேலில் சென்று மதப் பிரச்சாரம் செய்து பார்க்கட்டும் என்றும் விதண்டாவாதம் எழுதி உள்;ளார்.

இதையே திருப்பி நாம் அவரை கேட்கின்றோம் துணிவிருந்தால் பிரிட்டனில் இருந்து கொண்டே கிருஸ்தவ மதத்தை எதிர்த்து எழுதி புத்தகத்தை விற்பனை செய்து பார்க்கட்டும். புத்தகம் விற்பனை ஆவது அடுத்ததாக இருக்கட்டும் இவர் அங்கு இருக்க முடியுமா ? என்பதை முதலாவதாக சிந்திக்கட்டும்.

கிறுத்தவ மதத்தை எதிர்த்து எழுத ஒன்றுமில்லை என்று இவரால் மனசாட்சிக்கு திரையிட்டுக் கூற முடியுமா ? அவ்வாறெனில் புரட்டட்டும் உன்னதப்பாட்டு அத்தியாயத்தை ! துணிவிருந்தால் எழுதட்டும் பைபிள் பவுலின் கவிதைகள் என்று.

முடியாது பணத்துக்காகவும், படா டோப வாழ்க்கைக்காகவும் தான் பெண் பித்தனாகிய சாத்தான் ருஷ்டி பிரிட்டனில் தஞ்சம் புகுந்து மேற்காணும் ஈனச் செயலில் ஈடுபட்டு வருகிறார் என்பதை மொத்த உலகும் அறியும்.

நியாய> அநியாயம் பாராத அர்த்தமற்றப் போராட்டங்கள்.
ஒரு மருத்துவர் தாக்கப்பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த மருத்துவர்களும் கூடிக் குரலெழுப்புவது> ஒரு காவலர் தாக்கப்பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த காவலர்களும் கூடிக் குரலெழுப்புவது> ஒரு எழுத்தர் விமர்சிக்கப்;பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த எழுத்தர்களும் கூடிக் குரலெழுப்பும் போக்கு படித்தவர்கள் மத்தியிலும்  ஊடுருவி வருவது மிகப் பெரும் ஆபத்தானதாகும்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். 
நன்றி;அதிரை ஏ.எம்.பாரூக்

No comments:

Post a Comment