Tuesday, May 22, 2012


மாநாடாக மாறிய கூத்தாநல்லூர் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்!







கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பொதுக் கூட்டம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டை மிஞ்சும் அளிவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பியது.
சகோதரர்கள் அமர்வதற்கு கூட இடமில்லா நின்று கொண்டும் சுவர்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சொற்பொழிவை கேட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. மேலும் இரண்டு சகோதரர்களும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தங்களை வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்லாஹம் லில்லாஹ்!
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஆன்லைன் பி.ஜே. இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை எப்படியாது தடுத்தி நிறுத்திட வேண்டும் என சுன்னத் ஜமாஅத் உள்பட பல்வேறு அமைப்பினர் இரவு பகலாக  பெருமளவு பணத்தை செலவு செய்து சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவைகளை முறியடிக்கம் வண்ணம் பொதுக் கூட்டம் மாநாடாக மாறியது குறிப்பிடதக்கது. எல்லா புகழும் இறைவனுக்கே.
விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும்.








source: www.tntj.net

No comments:

Post a Comment