Tuesday, February 21, 2012

இண்டோமால் ஜீவல்லரியில் தீ விபத்து!


சிதம்பரம், :சிதம்பரம் மேல வீதியில் அமைந்துள்ள இண்டோமால் ஜீவல்லரியில் இன்று இரவு வழக்கம் போல் கடை அடைத்து விட்டு சென்ற பிறகு இரவு 9.15 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

கடையில்யுள்ள மின் மீட்டரில் தீ விபத்து ஏற்பட்டது உடனே பக்கத்தில் இருந்தவர்கள் தீயனைப்பு துறையினருக்கு தகவல் கொடுதார்கள். தீயனைப்பு வருவதற்குள் அருகில் உள்ள கடைகாரர்கள்  வந்து தீ-யை அனைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.  தகவல் அறிந்த பரங்கிப்பேட்டைலிருந்த கடை உரிமையாளர் ஜாவீத் உடனே சிதம்பரம் விரைந்தார்.

தீ விபத்து ஏற்பட்ட கடைக்கு தற்போது காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment