Sunday, June 24, 2012

கிள்ளையில் இஸ்லாத்தை ஏற்ற இரு தம்பதிகள்!



கிள்ளை ஜுன்24: கடலூர் மாவட்டம் (பரங்கிப்பேட்டை அருகே) கிள்ளையில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஏகத்துவ மற்றும் அழைப்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நமது அழைப்பு பணிக்கு அல்லாஹ் கொடுத்த பரிசாக இரண்டு தம்பதிகள் தங்களின் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

22.06.2012 அன்று ஜும்மா தொழுகைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிள்ளை மர்கஸிர்க்கு வருகை தந்த இரண்டு தம்பதியினரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாணவர் அணி ஒருங்கினைபாளர் சகோ.கலீல்லூர் ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் ஏகத்துவத்தின் தாரக மந்திரத்தை கூறி இஸ்லாத்தை ஏற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

பிரபாகரன்‍ - இரமா தம்பதியினர் முஹமது ரஃபீக் மற்றும் அப்சாரா பானு என்று தங்களுக்கு பெயர் சூட்டிக் கொண்டனர். தங்களின் புதல்வனுக்குமுஹ்ம்மத் என்று நமது ஈருளக தலைவரின் பெயரை சூட்டி மகிழ்ந்தனர்.


மற்றும் ஒரு தம்பதியினர் தங்களது பெயரினை முஜமில் மற்றும் ஷாஹின் பானு என்று சூட்டிக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இவர்களது மறுமை வாழ்விற்க்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

No comments:

Post a Comment