Friday, June 15, 2012

தீ விபத்திற்குள்ளான குடும்பகளுக்கு ரூபாய் 18 ஆயிரம் உதவி

















சிதம்பரம்; பூதகேணி புதுத் தெருவில் புதன் மாலை (13/06/2012) அன்று 7 கூரை வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது, இந்த கோர விபத்தில் அந்த வீட்டின் அணைத்து பொருள்களும் (பீரோ, பிரிஜ் மற்றும் ஆடைகள் எரிந்து சாம்பலனதோடு, பள்ளி மாணவர்களின் அனைத்து புத்தகங்களும் கூட எரிந்து விட்டது.
இந்த துயர சம்பவத்தை உடனடியாக பார்வையிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்திற்கும் ஜாதி மதம் பாராமல் குடும்பத்திற்கு 2000/வீதம் மொத்தம் 18000/ம் 7கூரை வீடுகள்(9.குடும்பகள்) மாவட்ட பொருளாளர் AK தாஜ்தீன்,கிளை நிவாகிகள் ஆதம்,இப்ராகிம்,ஹனீப் வழங்கினார்கள்.
சோதனையான நேரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது பள்ளி இமாம் ஹனீப் அவர்கள் சிற்றுரை வழங்கினார்கள்.
குறிப்பு' அரசாங்கம்,அரசியல்வாதிகளுக்கு வருவதற்கு முன்பாகவே வந்து ஆறுதல் கூறி உதவிதொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment