Friday, July 5, 2013

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி -சிதம்பரம் கிளை







பின்னதூர்; 04.07.13,பின்னதூர் மேற்கு,கலிபுல்லா நகரில் 03.07.13 அன்று இரவு 11.00 மணியளவில் ஒரு குடிசை வீட்டில் தீ பிடித்து எறிய துவங்கியது. இதனால் அருகில் இருந்த ஆறு குடிசைகளிலும் தீ பரவியது இதனால் வீட்டில் இருந்த பீரோ ,டிவி ,பணம்,சைக்கிள், உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின 

இதனை பார்த்த அப் பகுதிவாசிகளும் ஊர் இளைனர்களும் தீயைணைக்க முடிந்த அளவு பாடுபட்டனர்.

அதன்பின் வந்த தீ அணைப்பு வீரர்கள் மீதம் உள்ள எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தார்கள்.

காலை சுப்ஹூ தொழுகையில் இந்த செய்தியை அறிந்த TNTJ சிதம்பரம் கிளை நிர்வாகிகள்,உடனே அங்கு சென்று பாதிக்கபட்டோருக்கு ஆறுதல் கூறி,அங்கு எல்லவற்றையும் இழந்து என்ன செய்வது புரியாமல் இருந்த அந்த குடும்பத்துக்கு முதல் உதவியாக ஒரு குடும்பத்துக்கு RS;2000/வீதம் ஆறு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இதற்க்காக பாடுப்பட்ட அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்செய்யட்டும்! பெரும் விபத்திலிருந்து காத்த அல்லாஹ்விற்கு நன்றி சொல்வோம் இணை வைக்காமல்!

No comments:

Post a Comment