Sunday, December 9, 2012

நீடுரில் நடைபெற்ற மார்க்கவிளக்க கூட்டம்!




நீடுர், டிச 09: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூர் நெய்வாசலில்  மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் 08.12.2012 அன்று மாவட்ட தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ”விவாத அரங்கமும் விதண்டாவாதமும்”என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் ”சத்தியமே வெல்லும்” என்ற தலைப்பிலும் எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்! 

இக்கூட்டத்தில் இரண்டு பிறமதத்வர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டனர். ஒரு சகோதரி தனது பெயரை ஆயிஷா என மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்டார். அதைப்போல் இன்னொரு சகோதரர் தனது பெயரை ரபிக் என மாற்றி கொண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்டார். அல்லாஹ் அக்பர்!

மேலும், இக்கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரி உள்பட திரு குர்ஆன் வழங்கப்பட்டது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கடும் பணியை கூட பொருட்படுத்தாமல் சிறப்புரைகளை கேட்டு பயன் அடைந்தனர்.



No comments:

Post a Comment