Thursday, January 24, 2013

விஸ்வரூபம் படத்திற்கு, தமிழகம்,புதுவை,ஐதராபாத்,துபாய் இலங்கை தொடர்ந்து ......தடை .அல்ஹம்துலில்லாஹ்!



புதுச்சேரியிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை!
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டு விஸ்வரூபம் திரைப்படத்தை புதுச்சேரியில் தடை விதிக்கக் கோரி நேற்று தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் புதுச்சேரி மாநில முதல்வரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலி்ல்லாஹ்!
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வரிடம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அளித்த
புகார்: http://www.tntj.net/128439.html

விஸ்வரூபம் படத்தை கேரளாவில் தடைசெய்ய வேண்டும்” , TNTJ கேரள மண்டல பத்திரிக்கை செய்தி!

விஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதிக்கவேண்டும் என நேற்று (23-1-2013) தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கேரளா மண்டலம் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது.
இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும் என அந்த செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி கேரள பத்திரிக்கைகளில் வெளியானது.

தவ்ஹீத் ஜமாஅத் முயற்சி : இலங்கையில் விஸ்வரூபம் 
திரைப்படத்திற்கு தடை! அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக சித்தரித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளிவரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக ஜனாதிபதி, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியோரது கவணத்திற்கு விஸ்வரூபம் பிரச்சினை கொண்டுவரப்பட்டது.
இறுதியாக இன்று காலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) நிர்வாகிகள் நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் மூலமாக இன்று ஜனாதிபதியுடன் முஸ்லிம் எம்.பி க்கள் நடத்திய சந்திப்பில் இது தொடர்பாக பேசும்படி வேண்டிக் கொண்டதுடன் விஸ்பரூபத்தைத் தடை செய்வது குறித்த ஆவணங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்கள்.
சற்று நேரத்திற்கு முன்பு இலங்கை திரைப்படக் கூட்டுத் தாபனத்துடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) நிர்வாகிகள் மேற்கொண்ட அவசர சந்திப்பில் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பில் செய்திகளைக் கேட்டறிந்த திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரைப்படம் என்பது பொழுது போக்காக இருக்க வேண்டுமே தவிர ஒரு மதத்தை நிந்தனை செய்வதாக இருக்கக் கூடாது. இதுவரை இலங்கையில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு நாம் இந்த நிபந்தனையைத் தான் விதித்துள்ளோம். ஆகவே இது தொடர்பாக சரியான முடிவெடுக்கப்படும்என்றும் தெரிவித்ததுடன் திரைப்படத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாகவும், திரைப்படத்தின் காட்சிகளை முஸ்லிம் தலைவர் மற்றும் புத்தி ஜீவிகளுக்கு திரையிட்டுக் காட்டிய பின்பே தொடர்ந்தும் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் திரைப்படக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தம்.
இதே வேலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக நாளை 25.01.2012 ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து நடை பெறவிருந்த சினி சிட்டி திரையரங்கம் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகின்றது.


விஸ்வரூபம் படம் துபையில் வெளியாகவில்லை!

முஸ்லிம்களையும் , இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள கமல் இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (24-1-2013) துபையில் வெளியாக இருந்து விஸ்வரூபம் படத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. National Media Council அதிகாரிகள் இது குறித்து கூறுகையில்
”இந்த படத்தில் முஸ்லிம்கள் கொலை செய்வது போன்றும் குண்டு வைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது இது மிகவும் சென்சிடிவ் ஆன விசயம், இந்த படத்தை நாங்கள் இன்னும் review செய்து முடிக்கவில்லை இது குறித்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்படும்”எனக் கூறியுள்ளனர்.




No comments:

Post a Comment