Sunday, March 24, 2013

பரங்கிப்பேட்டையில் இளைஞர்களுக்கான தர்பியா!



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக “இளைஞர்களுக்கான தர்பியா” நேற்று (23.03.2013) பரங்கிப்பேட்டை ”மஸ்ஜிதுத் தவ்ஹீத்” (TNTJ மர்கஸ்) பள்ளியில் நடைபெற்றது.

அஸர் தொழுகைக்கு பிறகு ஆரபிக்கப்பட்ட முதல் அமர்வில் “இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி” மாவட்ட பொருளாளர் சகோ.சிராஜ் மற்றும் மாவட்ட பேச்சாளர் மெளல்வி.ஷாபி மன்பஈ ஆகியோரால் நடைபெற்றது.

மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற இரண்டாவது அமர்வில் மெளலவி.ஷாபி மன்பஈ அவர்கள் “இஸ்லாமிய இளைஞர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த தர்பியா நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை, கிள்ளை, பின்னத்தூர் மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதியிலிருந்து ஏரளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரங்கிப்பேட்டை கிளை சகோதரர்கள் சிறப்பான முறையில் செய்துயிருந்தனர்.

No comments:

Post a Comment